முல்லைப் பெரியாறு அணை- தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கைது செய்த கேரள போலீஸ்!
தேக்கடி: மது பாட்டில்களுடன் வந்ததாகக் கூறி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஐந்து பேரை கேரள போலீஸார் அடாவடியாக கைது செய்து சில மணி நேரங்களுக்குப் பிறகு விடுவித்துள்ளனர்.
கேரளாக்காரர்களின் அட்டகாசத்திற்கும், அநியாயத்திற்கும் அளவே இல்லை. குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை பொறுப்பில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை அவர்கள் ரொம்பவே அவமானப்படுத்தும் வகையில் நடத்துவது வழக்கம். இதை உறுதியுடன் எதிர்க்க இதுவரை தமிழக அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள், கேரளத்தினரிடம் தொடர்ந்து அவமரியாதைகளைச் சந்தித்து வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணை பகுதி மற்றும் தேக்கடியில் அதேபோல், பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகம், பொறியாளர்கள் குடியிருப்பு, ஆய்வு மாளிகை, தமிழக மின்வாரிய பொறியாளர்கள், ஊழியர்கள் குடியிருப்புகளும் உள்ளன. இவை அனைத்தும் கேரள மாநிலத்தில் இருந்தாலும் தமிழக பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
முல்லைப் பெரியாறு அணைக்கு திங்கள்கிழமை மாலை வழக்கமான பணிகளை மேற்கொள்வதற்கும், மாத சம்பளத்தை ஊழியர்களுக்கு வழங்குவதற்காகவும் அணையின் உதவி செயற்பொறியாளர் கல்யாணசுந்தரம், உதவி பொறியாளர்கள் வீரக்குமார், ரமேஷ், பொதுப்பணித்துறை ஊழியர் மணி, படகு டிரைவர் முருகன் ஆகியோர் தேக்கடி படகு தளத்திலிருந்து அணைக்கு செல்வதற்கு வந்தனர்.
அப்போது, படகுத் தளத்திலிருந்த கேரள போலீஸார் 5 பேரின் அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்றும், பதிவேட்டில் கையெழுத்து இட வேண்டும் என்று தெரிவித்தார்களாம்.
தமிழக அதிகாரி கல்யாணசுந்தரம் அணை எங்களது கட்டுப்பாட்டில் உள்ளது. அணைக்கு செல்வதற்கு யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்ததால், இரண்டு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், அனுமதி இல்லாமல் 4 மது பாட்டில்கள் வைத்திருப்பதாகவும், தமிழக அதிகாரி உள்பட 5 பேரை கைது செய்வதாக கூறி கேரள போலீஸார், தமிழக அதிகாரிகளை படகு தளத்தில் நிறுத்தி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தமிழக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கேரள போலீஸாரும் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் 3 மணி நேரத்திற்கு பிறகு கேரள போலீஸார் கட்டுப்பாட்டில் இருந்த தமிழக அதிகாரி மற்றும் ஊழியர்களை விடுவிக்கப்பட்டனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications