இந்த கொடுமையை பாருங்க.. கொல்லப்பட்ட காஷ்மீர் சிறுமிக்காக ஆஜராகும் பெண் வக்கீலுக்கு தொடர் மிரட்டல்
காஷ்மீர் சிறுமி கூட்டு பாலியல் வன்முறை விவகாரத்தில் ஆஜராகும் பெண் வக்கீலுக்கு தொடர் மிரட்டலுக்கு ஆளாகியுள்ளதாக புகார் அளித்துள்ளார்.
Recommended Video

ஜம்மு: காஷ்மீர் சிறுமி கூட்டு பாலியல் வன்முறை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஆதரவாக ஆஜராகும் பெண் வக்கீல் தீபிகா சிங் ராஜ்வாத் சக வக்கீல்களின் தொடர் மிரட்டலால் பாதிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதியிடம் புகார் அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா என்கிற கிராமத்தில், குஜ்ஜார் நாடோடி முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி, சிலரால் கடுமையான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இதுதொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வலதுசாரி அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்காக ஆஜாராகி வாதாடி வரும் வக்கீல் தீபிகா சிங் ராஜ்வத்திற்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக அவர் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், வெளியில் இருந்து மட்டுமல்லாது நீதிமன்ற வளாகத்தில் சக வக்கீல்களாலும் தான் மிரட்டலுக்கு ஆளாவதாகவும், ஜம்மு காஷ்மீர் பார் கவுன்சில் தலைவர் பூபேந்தர் சிங் சலாத்தியா இந்த வழக்கில் ஆஜராகாமல் இருக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்று தன்னை மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நேற்று ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதியிடம், நீதிமன்றத்தில் ஆஜராகும் போது பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவை இல்லை எனவும், நீதிமன்றத்தின் கண்காணிப்புடன் முறையான விசாரணை நடந்து வருவதாகவும் தீபிகா சிங் ராஜ்வத் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications