சுப்ரீம் கோர்ட்டுக்கு பதில் அளிக்க முடியாது.. எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து சுமித்ரா விளக்கம்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற காங்கிரஸ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், காங்கிரஸிற்கு எதிர்க்கட்சித்தலைவர் அந்தஸ்தைத் தராமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது.
இதற்கிடையே லோக்பால் அமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லோக்பால் தேர்வு குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் மிக முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்றம், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை யாருக்கும் அளிக்காமல் நீண்ட நாட்களுக்கு தள்ளி வைக்க முடியாது என்றும் தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த விவகாரம் குறித்து புரிந்துகொள்ள வேண்டும். மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் பதில் அளிக்க கேட்டுக்கொண்டுள்ளது. இதில் சபாநாயகர் பதில் அளிக்க முடியாது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் குறித்து மத்திய அரசே பதிலளிக்கும். பின்னர் நான் எப்படி பதிலளிக்க முடியும். என்ன விதி உள்ளது என இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் அளிப்பார். லோக்சபா எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதே எனது பணி' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications