தொடங்கியது பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை.. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
பூரி/ அகமதாபாத்: ஒடிஷா மாநிலத்தின் பழமைவாய்ந்த புரி ஜெகந்நாதர் கோயிலின் புகழ்பெற்ற ரத யாத்திரை புதன்கிழமையன்று தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த ரத யாத்திரை திருவிழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். போலீசாருடன் இணைந்து துணை ராணுவப்படையினரும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒடிஷா மாநிலம், புரியில் அமைந்துள்ள ஜெகந்நாதர் கோயில், வைணவத் திருக்கோயில்களில் முக்கியமானதாகும். முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில், மூலவர்களான ஜெகந்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திராதேவி திருமேனிகள் மரத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜெகநாதர் கோயிலில் ஆண்டு தோறும் ரதயாத்திரை விழா நடைபெறும். இந்த விழாவின் போது ஜெகநாதர், பாலபத்ரா, சுப்த்ரா தேவி ஆகிய தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்ட 3 பிரமாண்ட ரதங்களில் வலம் வருவர்.

பூரி ரத யாத்திரை
பூரியில் வரும் 15ஆம் தேதி வரை இந்த திருவிழா நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். ஜெகந்நாதர், அவரது சகோதரர் பாலபத்ர நாதர், சுபத்ரா தேவி என 3 ரதங்களையும் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.

புத்தம் புது மரங்கள்
மற்ற ஊர் தேர்கள் போல் அல்லாது, பூரியில் ஆண்டுதோறும் தேர்கள் செய்யப்பட்டு ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இதற்காக ஒடிஷா மாநில வனத்துறையினர் மரங்களை வழங்கி வருகின்றனர்.

உச்சக்கட்டப்பட்ட பாதுகாப்பு
ஏராளாமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ரத யாத்திரையை காண வந்துள்ளனர். ரத யாத்திரையையொட்டி பூரி நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிரவாத தடுப்பு படை, அதிவிரைவுப்படை, குறிபார்த்து சுடும் கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிர கண்காணிப்பு
பூரி கடற்கரையை கடலோர பாதுகாப்பு படை கண்காணித்து வருகிறது. கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் விரிவான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ரத யாத்திரை நிகழ்ச்சி சிசிடிவி கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

அகமதாபாத்தில் ரதயாத்திரை
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் ரத யாத்திரை இன்று தொடங்கியது. குஜராத் முதல்வர் திருமதி ஆனந்திபென் பட்டேல் நடத்திய சிறப்பு வழிபாட்டினைத் தொடர்ந்து, ஜமல்பூரில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் இருந்து யாத்திரைகள் புறப்பட்டன. அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுக்க, ஆடல் பாடலுடன் ரத யாத்திரை தொடங்கியது.

குஜராத் பக்தர்கள்
லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று சுவாமி வழிபாடு நடத்தினர். இந்த ரத யாத்திரை சுமார் 11 மணி நேரம் நீடிக்கும் என்பதால், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
-
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications