டெல்லியில் சோனியாவுடன் ஸ்டாலின் சந்திப்பு.. என்ன பேசிருப்பாங்க?
டெல்லி: திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.
கடந்த 18ம் தேதி தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியது. அப்போது திமுகவினர் மீது நடைபெற்ற தாக்குதல்கள் மற்றும் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி குறித்தும் ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

அங்கு நேற்று மாலை ஜனாதிபதியை சந்தித்து புகார் தெரிவித்த ஸ்டாலின், இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது எம்பி திருச்சி சிவா உள்ளிட்ட திமுக எம்பிக்கள், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியுடன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழல் மற்றும், தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது திமுகவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஸ்டாலின் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் நிலவி வரும் இன்றைய அரசியல் சூழல்குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
-
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications