பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகியதற்கு மமதா வரவேற்பு
கொல்கத்தா: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகியதற்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார். நாடு நாசமாவதை தடுக்க இத்தகைய நடவடிக்கை தேவை என குறிப்பிட்டுள்ளார் மமதா பானர்ஜி.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகிவிட்டது.
அத்துடன் மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளன. பாஜக அணியில் இருந்து தெலுங்குதேசம் விலகியிருப்பதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.
I welcome the TDP's decision to leave the NDA. The current situation warrants such action to save the country from disaster
— Mamata Banerjee (@MamataOfficial) March 16, 2018
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் மமதா பானர்ஜி பதிவிட்டுள்ளதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகும் முடிவை வரவேற்கிறேன்.
I appeal to all political parties in the Opposition to work closely together against atrocities, economic calamity and political instability
— Mamata Banerjee (@MamataOfficial) March 16, 2018
நாடு நாசமாவதைத் தடுக்க இந்த நடவடிக்கை அவசியம். தற்போதைய அரசியல் சூழலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு மமதா பானர்ஜி பதிவிட்டுள்ளார்.