வாஷிங் மெஷினில் பதுக்கியிருந்த திருடன்... 14 ஆண்டாக டிமிக்கி கொடுத்தவர்... மும்பையில் பரபரப்பு
மும்பையில் 14 ஆண்டுகளாக தப்பிய திருடன் வாஷிங் மெஷினில் பதுக்கியிருந்தபோது பிடிபட்டார்.
மும்பை: பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது நடவடிக்கைக்கு பயந்து கொண்டு 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வாஷிங் மெஷினில் மறைந்திருந்த போது போலீஸிடம் பிடிபட்டார்.
மும்பையை சேர்ந்த திவாரி, கடந்த 2002-ஆம் ஆண்டு புனேவை சேர்ந்த 3 பேரை முதுநிலை கல்வியில் சேர்த்துவிடுவதாக உறுதிஅளித்துவிட்டு கோடிக்கணக்கான பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றிவிட்டார்.
அவர் மீது புனேவில் ஏராளமான மோசடி வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அவரை போலீஸார் தேடி வந்தனர். அவர் கிடைக்காததால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

3 அறைகள் கொண்ட வீடு
இந்நிலையில் அவரை தேடும் பணியில் மும்பை போலீஸார் ஈடுபட்டனர். அப்போது திவாரி ஒரு பெரிய அபார்ட்மென்ட்டில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. மும்பையில் இருந்த சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் 3 அறைகளை கொண்ட வீட்டுக்கு போலீஸார் சென்றனர்.

போலீஸார் சந்தேகம்
அப்போது அங்கிருந்த திவாரியின் மனைவி, போலீஸாரை 3 மணி நேரமாக வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.மாறாக அவர் வீட்டுக்குள் இல்லை என்றே கூறிவந்தார். இது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மறு முறை தேடல்
எனினும் திவாரியின் மனைவியின் அனுமதியை மீறி போலீஸார் வீடு முழுவதும் தேடினர். ஆனால் திவாரி கிடைக்கவில்லை. அப்போது ஒரு போலீஸ் அதிகாரிக்கு மட்டும் திவாரி நிச்சயம் வீட்டுக்குள்தான் இருக்க வேண்டும், எனவே இன்னொரு முறை தேடினால் உண்மை விளங்கும் என்று நினைத்தார்.

அழுக்கு மூட்டைக்குள்...
அதன்படி மீண்டும் ஒரு முறை 3 அறை கொண்ட அந்த வீட்டை போலீஸார் சோதனையிட்டனர். அப்போது எல்லா பொருட்களும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தது. ஆனால் வாஷிங் மெஷின் மட்டும் நகர்வது போல் தெரிகிறது. இதையும் விட்டு வைக்கக் கூடாது என்று நினைத்த போலீஸார், உடனடியாக வாஷிங் மெஷினை திறந்து பார்த்தனர். அப்போது அதில் துணிகள் கிடந்தன.

திவாரி மனைவி மீதும் வழக்கு
அவற்றை நீக்கிவிட்டு பார்த்தபோது என்ன ஆச்சரியம், திவாரி அந்த மெஷினுக்குள் இருந்தார். குறுகிய இடத்தில் உட்கார முடியாததால் திவாரி தனது உடம்பை நெளித்தபோது வாஷிங் மெஷினும் நகர்ந்தது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக அவரை போலீஸார் கைது செய்தனர். தற்போது திவாரிக்கு 54 வயதாகிறது. இதையடுத்து போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக திவாரியின் மனைவி மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications