வாஷிங் மெஷினில் பதுக்கியிருந்த திருடன்... 14 ஆண்டாக டிமிக்கி கொடுத்தவர்... மும்பையில் பரபரப்பு
மும்பையில் 14 ஆண்டுகளாக தப்பிய திருடன் வாஷிங் மெஷினில் பதுக்கியிருந்தபோது பிடிபட்டார்.
மும்பை: பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது நடவடிக்கைக்கு பயந்து கொண்டு 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வாஷிங் மெஷினில் மறைந்திருந்த போது போலீஸிடம் பிடிபட்டார்.
மும்பையை சேர்ந்த திவாரி, கடந்த 2002-ஆம் ஆண்டு புனேவை சேர்ந்த 3 பேரை முதுநிலை கல்வியில் சேர்த்துவிடுவதாக உறுதிஅளித்துவிட்டு கோடிக்கணக்கான பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றிவிட்டார்.
அவர் மீது புனேவில் ஏராளமான மோசடி வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அவரை போலீஸார் தேடி வந்தனர். அவர் கிடைக்காததால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

3 அறைகள் கொண்ட வீடு
இந்நிலையில் அவரை தேடும் பணியில் மும்பை போலீஸார் ஈடுபட்டனர். அப்போது திவாரி ஒரு பெரிய அபார்ட்மென்ட்டில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. மும்பையில் இருந்த சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் 3 அறைகளை கொண்ட வீட்டுக்கு போலீஸார் சென்றனர்.

போலீஸார் சந்தேகம்
அப்போது அங்கிருந்த திவாரியின் மனைவி, போலீஸாரை 3 மணி நேரமாக வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.மாறாக அவர் வீட்டுக்குள் இல்லை என்றே கூறிவந்தார். இது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மறு முறை தேடல்
எனினும் திவாரியின் மனைவியின் அனுமதியை மீறி போலீஸார் வீடு முழுவதும் தேடினர். ஆனால் திவாரி கிடைக்கவில்லை. அப்போது ஒரு போலீஸ் அதிகாரிக்கு மட்டும் திவாரி நிச்சயம் வீட்டுக்குள்தான் இருக்க வேண்டும், எனவே இன்னொரு முறை தேடினால் உண்மை விளங்கும் என்று நினைத்தார்.

அழுக்கு மூட்டைக்குள்...
அதன்படி மீண்டும் ஒரு முறை 3 அறை கொண்ட அந்த வீட்டை போலீஸார் சோதனையிட்டனர். அப்போது எல்லா பொருட்களும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தது. ஆனால் வாஷிங் மெஷின் மட்டும் நகர்வது போல் தெரிகிறது. இதையும் விட்டு வைக்கக் கூடாது என்று நினைத்த போலீஸார், உடனடியாக வாஷிங் மெஷினை திறந்து பார்த்தனர். அப்போது அதில் துணிகள் கிடந்தன.

திவாரி மனைவி மீதும் வழக்கு
அவற்றை நீக்கிவிட்டு பார்த்தபோது என்ன ஆச்சரியம், திவாரி அந்த மெஷினுக்குள் இருந்தார். குறுகிய இடத்தில் உட்கார முடியாததால் திவாரி தனது உடம்பை நெளித்தபோது வாஷிங் மெஷினும் நகர்ந்தது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக அவரை போலீஸார் கைது செய்தனர். தற்போது திவாரிக்கு 54 வயதாகிறது. இதையடுத்து போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக திவாரியின் மனைவி மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications