மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மீது வளையல் வீச்சு.. குஜராத்தில் பரபரப்பு.. இளைஞர் கைது
வந்தே மாதரம் என்று கத்திக் கொண்டே மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மீது இளைஞர் ஒருவர் வளையலை வீசினார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அகமதாபாத்: மத்திய அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மேல் வளையல் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் அம்ரேலி நகரின் விவசாய பல்கலைக்கழக அரங்கில் பாஜக அரசின் 3 ஆண்டு கால சாதனை விளக்க கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி விழாவுக்கு தலைமை ஏற்று உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த மோடா பந்தாரியா கிராமத்தைச் சேர்ந்த கஸ்வாலா எனும் இளைஞர், வந்தே மாதரம் என்று கத்தியபடியே ஸ்மிருதி இராணியை நோக்கி வளையல்களை வீசினார். மேடைக்கு வெகு தொலைவில் இருந்து வளையல் வீசப்பட்டதால், அமைச்சர் மீது வளையல் படவில்லை. இளைஞரின் இந்தச் செயலால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த செயலில் ஈடுபட்ட கஸ்வாலாவை போலீசார் மடக்கிப் பிடித்து அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். அப்போது போலீசாரிடம் பேசிய அமைச்சர், இளைஞர் வளையலை வீசினாலும் அவற்றை சேகரித்து அவரது மனைவிக்கு பரிசாக அனுப்பி வைப்பேன் என்று கூறினார்.
கஸ்வாலா ஒரு விவசாயி. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் நடந்துள்ளது போல குஜராத் மாநிலத்திலும் விவசாயக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே தன்னுடைய எதிர்ப்பை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசிய கூட்டத்தில் காட்டியுள்ளார்.
வளையலை வீசி விவசாயி கஸ்வாலா எதிர்ப்பை தெரிவித்துள்ளது நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications