ஒடிஷாவில் நாளை வாக்குப் பதிவு- தேர்தலை புறக்கணிக்க மாவோயிஸ்டுகள் அழைப்பு!
ராயகடா: ஒடிஷா மாநிலத்தில் நாளை நடைபெறும் வாக்குப் பதிவை புறக்கணித்து முழு அடைப்புப் போராட்டத்துக்கு மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
லோக்சபா தேர்தலின் 3வது கட்டமாக நாளை நாடு முழுவதும் 91 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் ஒடிஷா மாநில தொகுதிகளும் அடங்கும்.

இந்நிலையில் ஒடிஷாவில் லோக்சபா தேர்தலை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஊடகங்களுக்கு நேற்று மாவோயிஸ்டுகள் நேற்று அனுப்பி வைத்த "ஆடியோ" செய்தியில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹலகாண்டி, ராயகடா, கந்தமால், கஜபதி மாவட்டங்களில் முழு அடைப்புக்கும் மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் தேர்தல் புறக்கணிப்பு, முழு அடைப்பை வலியுறுத்தி பல இடங்களில் போஸ்டர்களையும் மாவோயிஸ்டுகள் ஒட்டி வைத்துள்ளனர்.
இதனால் நாளை வாக்குப் பதிவின் போது மாவோயிஸ்டுகள் வாக்குச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுகிறது. அப்படி எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications