மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் அப்படி என்னதான் சிக்கல்?
மோசடி தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி: தொழிலதிபர் விஜய் மல்லையா பற்றி இந்திய ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளியாகும் செய்திகள், அவரை லண்டனில் இருந்து மீட்டுவரும் பணிகளை தொய்வுபடுத்தி சிக்கலை உண்டாக்கியுள்ளது என்று, இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஐடிபிஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் இருந்து, பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, அவற்றை திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு தப்பிச் சென்றவர் விஜய் மல்லையா. அதேசமயம், அவருக்குச் சொந்தமான கார் ரேஸ் நிறுவனம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் கிரிக்கெட் அணி, யுனைடெட் ப்ரூவரீஸ் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் தொடர்ந்து இயங்கிவருகின்றன.

ஆனால், லண்டனில் தலைமறைவாக இருந்துவரும் விஜய் மல்லையாவை கைது செய்யவும், நாடு கடத்தவும் இந்திய அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டும் பலன் இல்லை. இந்நிலையில், அவரை நாடு கடத்துவது பற்றி பிரிட்டன் அதிகாரிகளிடம் பேசி, இந்திய அரசு ஒப்புதல் பெற்றுள்ளது.
இதுகுறித்த வழக்கு விசாரணை, லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய தரப்பில் அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் பங்கேற்று, தங்களது வாதங்களை முன்வைத்து வருகிறார்கள். விஜய் மல்லையாவும், தனது வழக்கறிஞர்களுடன் இந்த விசாரணையில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், அவரை பற்றி இந்திய ஊடகங்களில் தொடர்ச்சியாக மோசடி மன்னன் என செய்தி வெளியாவதற்கு, மத்திய அரசு வட்டாரங்கள் அதிருப்தி தெரிவிக்கின்றன.
விஜய் மல்லையா பற்றி ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளை, அவர் தனக்குச் சாதகமாக பயன்படுத்தி, லண்டன் நீதிமன்றத்தில் முறையிட வாய்ப்புள்ளது. இதனால், அவரை இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் தொய்வு ஏற்படும்.
எனவே இந்திய ஊடகங்கள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்றும், வெளியுறவுத் துறை மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications