'ஆப் பைட்டியே'... 5 ஆண்டுகள் லோக்சபாவை சுவாரஸ்யமாக நடத்திய மீரா குமார் #MeiraKumar
2009 முதல் 2014 வரை ஆப் பைட்டியே என்று கூறியே சுவாரஸ்யமாக லோக்சபாவை நடத்தியவர் மீரா குமார்.
ஆப் பைட்டியே என்ற வார்த்தையை கேட்டாலே லோக்சபா சபாநாயகர் மீரா குமார்தான் நினைவுக்கு வருவார். அந்த அளவிற்கு சுவாரஸ்யமாக சபையை நடத்தியவர் இன்று எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமைக்குரியவர் மீரா குமார். அவர் சபாநாயகராக தேர்வான பின்னர் சபையை நடத்தும் போது பல எம்பிக்களும் பழக்கதோஷத்தில் சார் என்றே அழைத்தனர். பின்னர் ஒருவழியாக சமாளித்துக் கொண்டு மேடம் ஸ்பீக்கர் என்று மாற்றிக் கொண்டனர்.

அசால்ட் சபாநாயகர்
லோக்சபாவில் அப்போது எதிர்கட்சியாக இருந்த பாஜக தினசரியும் அனலை கிளப்பும். லோக்சபாவில் அவர் சபையை நடத்தும்போது நார்மலாக பேசியதை விட அப்நார்மலாக பிரச்சினையைக் கிளப்புபவர்களை உட்கார வைக்க படும்பாடுதான் ரொம்ப அதிகம். ஆனாலும் அசால்டாக சபையை நடத்தினார்.

ஆப் பைட்டியே
எதிர் கட்சி உறுப்பினர்கள் எழுந்து கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டாலும்... அவர் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. சுனோ, பைட்டியே, ஆப் பைட்டியே, அச்சா ஆகியவைதான் அவர் அதிகம் பயன்படுத்திய வார்த்தைகளாக இருக்கும்.

ஓவர் சத்தம் ஆகாது
மீரா குமாரின் குரல் மென்மையாகவே இருக்கும் எதிர்கட்சியினர் கத்தி கூச்சல் போடுவார்கள். சபாநாயகரை எதையுமே அதிகம் பேச விடாத அளவுக்கு சத்தம் ஜாஸ்தியாகவே இருக்கும் பெரும்பாலும்.

மிளகு பொடி சர்ச்சை
நாடாளுமன்றத்துக்குள் மிளகுப் பொடியைத் தூவி எம்.பிக்கள் விளையாடிய ஆட்டம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மிளகு பொடி என்ன? மிளகாய்ப் பொடியே தூவினாலும் நாங்க அசரமாட்டோம் என்று கூறி கட்டுப்கோப்பாக சபையை நடத்தியவர் மீரா குமார்.

சமூக வலைத்தளங்களில் மீரா குமார்
மீரா குமாரின் ஆப் பைட்டியேவை வைத்தே சமூக வலைத்தளங்களில் அதிகம் கிண்டலடித்தனர். மிளகு பொடி சர்ச்சைக்கு கூகுள் டூடுள் போட்டு சமுக வலைத்தளங்களில் கிண்டலடித்தனர்.

மீண்டும் லைம் லைட்டில் மீரா குமார்
2014ஆம் ஆண்டு வரை சபாநாயகராக பதவி வகித்த மீரா குமார், பாஜக ஆட்சி வந்த பின்னர் மக்களால் மறக்கப்பட்டிருந்தார். தற்போது எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் மீண்டும் லைம் லைட்டிற்குள் வந்துள்ளார்.

பழக்க தோஷத்தில் ஆப் பைட்டியே
எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வாகியுள்ள மீரா குமார் ஒருவேளை வெற்றி பெற்று ஜனாதிபதியானால் நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றும் போது பழக்க தோஷத்தில் ஆப் பைட்டியே என்று கூறாமல் இருந்தால் சரிதான்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications