ராஜ்யசபாவில் சத்தம் போட்டு சிரித்த காங். எம்.பி ரேணுகா சவுத்ரி.. மோடி கொடுத்த 'ஸ்டன்' ரிப்ளை!
ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தபோது உரக்க சிரித்த ரேணுகா சவுத்ரிக்கு உரிய பதிலடியை கொடுத்தார்.
டெல்லி: ராஜ்யசபாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசிக் கொண்டிருந்தபோது அட்டகாசமாக சிரித்த காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரியின் சிரிப்புக்கு பதிலடியாக ஸ்டன் பதில் கூறினார் பிரதமர் மோடி.
மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசி கொண்டிருந்தார். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ரேணுகா சவுத்ரி பலமாக சிரித்தார். இதை அடுத்து ராஜ்யசபா தலைவர் வெங்கய்யா நாயுடு ஆட்சேபம் தெரிவித்தார்.

மேலும் ஒட்டுமொத்த நாடே நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் கேலி பொருளாகி விடக் கூடாது என்றார். அப்போது குறுக்கிட்ட நரேந்திர மோடி, சபாநாயகரே! ரேணுகா சவுத்ரியை எதுவும் சொல்லாதீர்கள். அவர் சிரிக்கட்டும். ராமாயணம் சீரியலுக்கு பிறகு, இத்தனை சப்தத்துடன் சிரிக்கும் பெண்ணை பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது என்றார் மோடி.
ராமாயணத்தில் இப்படி பயங்க சத்தத்தோடு சிரிக்கும் பெண் கதாப்பாத்திரம் யார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
மோடியின் சாதுர்யமான கிண்டல் பதிலை கேட்டதும், பாஜகவினர் சிரித்தனர். ரேணுகா சவுத்ரியால் பதில் பேச முடியவில்லை. கூட்டத் தொடர் முடிந்த பிறகு, மோடியின் விமர்சனம் குறித்து, ரேணுகா சவுத்ரி கூறுகையில், பெண்களை இழிவுப்படுத்துவது போல் மோடி பேசியுள்ளார்.
என்னை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்த மோடியிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? என்னால் அவர் அளவுக்கு இறங்கி பேச முடியாது என்றார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பிரதமர் மோடி மக்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள்.. கங்காநகர் தெரியுமா? இந்தியாவை மிரட்டும் ஒரு விஷயம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications