கிராமங்களை எம்.பி.க்கள் தத்தெடுக்கும் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
டெல்லி: எம்.பி.க்களின் கிராம வளர்ச்சி திட்டமான ‘‘சன்சாத் ஆதர்ஷ், சிராம் யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற கிராமங்களை எம்.பி.க்கள் தத்தெடுக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாடு சுதந்திரம் பெற்ற பின் அமைக்கப்பட்ட ஒவ்வொரு அரசும் கிராமபுறமேம்பாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்தியது. இது தொடர்ந்து செயல்படுத்தப்படும். அதே நேரத்தில் காலத்துக்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

மக்கள் மேம்பாடு
கிராமபுற மேம்பாட்டில் நாம் காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வருவோம். இதில் புதிய விஷயங்களும் இடம் பெறும். இந்த திட்டம் ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கானது. ஒருவர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட வேண்டும்.

ஒரு எம்.பிக்கு 3 கிராமங்கள்
ஒவ்வொரு எம்.பி.யும் 3 கிராமங்களை தத்து எடுக்க வேண்டும். மொத்தம் 800 எம்.பி.க்கள் உள்ளனர். இதன் மூலம் 2019-ம் ஆண்டுக்குள் 2,500 கிராமங்கள் மேம்பாடு அடைந்துவிடும்.

கிராமங்கள் நலனே முக்கியம்
இதன் மூலம் அனைத்து கிராமங்களும் எரிவாயு, உரம் உள்பட அனைத்து வசதிகளையும் பெறும். கிராம மக்களின் நலனே நமது கனவாகும். எந்த ஆட்சி வந்தாலும் இந்த திட்டத்தை கிடப்பில் போட முடியாது.

வாரணாசி கிராமம்..
நான் வாரணாசி பகுதியில் உள்ள கிராமத்தை தேர்வு செய்ய உள்ளேன். இதற்கான வழிகாட்டுதல் கிடைக்கப் பெற்றேன். ஆலோசனை செய்து இது பற்றி முடிவு செய்வேன்.

எம்.எல்.ஏக்களும் கூட..
ஒவ்வொரு மனிதன் அல்லது கிராமம் அனைத்து வசதிகளையும் பெற்று பெருமை அடைவதையே விரும்புகிறோம். இந்த திட்டத்தை பயன்படுத்தி எம்.எல்.ஏ.க்களும் கிராமங்களை மேம்படுத்த முயற்சிக்கலாம்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications