மகாத்மா காந்தியின் 67வது நினைவு தினம்- பிரணாப் முகர்ஜி, மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி
டெல்லி: மகாத்மா காந்தி 67-வது நினைவு நாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவை மீட்டு சுதந்திரம் பெற்றுத்தந்த மகாத்மா காந்தியின் 67வது நினைவுதினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை 11 மணி அளவில் தியாகிகளை நினைவுகூறும் விதமாக அரசு அலுவலகங்களில் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
காந்தியின் நினைவை போற்றும் வகையில் தனது ட்விட்டரில் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த பிரதமர் மோடி, அன்புள்ள தேசத் தந்தைக்கு அவரது நினைவு நாளில் வீர வணக்கங்கள்!. இந்த நாட்டுக்காக தங்களது உயிரை துறந்த தியாகிகளின் வீரத்தை இந்நாளில் நினைவுகூர்வோம். அவர்களின் தியாகம் நமது நினைவில் என்றென்றும் நிலைத்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில்...
சென்னை கடற்கரை சாலையில உள்ள காந்தியடிகளின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு தமிழக ஆளுநர் ரோசய்யா மற்றும் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், பள்ளி மாணவ மாணவிகளும், பொது மக்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
-
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது












Click it and Unblock the Notifications