பதன்கோட் வந்தடைந்தார் பிரதமர் மோடி - தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்ற விமான தளத்தில் ஆய்வு
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட பதான்கோட் விமானப் படைத் தளத்தை நேரில் ஆய்வு செய்ய வருகை புரிந்துள்ளார். இந்நிலையில் பதன்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதமரின் வருகையால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமானப் படைத் தளத்துக்கு வந்த பிரதமர் மோடி, விமானப் படை மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். பதான்கோட் விமானப் படை தளத்தில் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்ற தேடுதல் வேட்டை நேற்று நிறைவு பெற்றது. விமானப் படைத் தளம் முழுக்க சோதனையிடப்பட்டு, எங்கும் எந்த தீவிரவாதியும் பதுங்கி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
PM was given a presentation on counter-terrorist & combing op by Defence Forces at #Pathankot Airbase (Source: PIB) pic.twitter.com/cYD56SUHNm
— ANI (@ANI_news) January 9, 2016 பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளத்தில் கடந்த 2 ஆம் தேதி நுழைந்த தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் இந்திய தரப்பில் 7 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். நாட்டின் பாதுகாப்பு குறித்து பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பதான்கோட் விமானப் படை தளத்தை பார்வையிடும் பிரதமர் மோடி, வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும், காயமடைந்த வீரர்களை சந்தித்துப் பேசவும், தீவிரவாதிகளுடன் நேருக்கு நேர் மோதிய வீரர்களை சந்தித்து பாராட்டு தெரிவிக்கவும் உள்ளார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பதன்கோட் விமான படை தளத்தை சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications