தென்மேற்கு பருவமழை ஜூனில் தொடங்கும்- தென் இந்தியாவில் இயல்பாக இருக்குமாம்!
தென்மேற்கு பருவமழை இந்தியாவில் ஜூன் முதல்வாரத்தில் தொடங்கும் என்றும் நடப்பாண்டு இயல்பான அளவிற்கு மழையிருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
டெல்லி: நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைக்கிறது. கோடை மழை பெய்யும் என்று எதிர்பார்த்தும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் முதல்வாரத்தில் தொடங்கும் என்றும் தென் இந்தியாவில் இயல்பான மழை அளவு இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். வட இந்தியாவில் பருவமழை பற்றாக்குறையாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
ஆண்டுதோறும், ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். மழையால், தமிழகம், கேரளா உள்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் பலன்பெறும்.
வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர் இறுதிவரை நீடிக்கும். கடந்த ஆண்டு இரு பருவமழைகளுமே ஏமாற்றி விட்டன. தென் இந்தியாவில் குறிப்பாக, கர்நாடகம், தமிழகத்தில் வறட்சி தாண்டவமாடுகிறது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

கோடை வெப்பம்
மார்ச் துவக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. வட இந்தியாவில் 120 பாரன்ஹீட் வரை கொளுத்துகிறது. தமிழ்நாட்டிலும் 113 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே கோடை மழை பெய்கிறது.

பருவமழை
நடப்பாண்டு தென் மேற்கு பருவமழை ஜூன் முதல்வாரத்தில் துவங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். நாடுமுழுவதும் ஒரே சீரான அளவிற்கு மழை பெய்யக்கூடும் என்றும் தென் இந்தியாவில் இயல்பை விட அதிகமாகவே மழை பதிவாகும் என்று கூறி ஆறுதல் அளித்துள்ளனர் வானிலை ஆய்வாளர்கள்.

தென் இந்தியாவில் மழை
வானிலையில் பேரிடர் மேலாண்மை சேவை மையம் நடத்திய கருத்தரங்கத்தில் பேசிய மூத்த வானிலை ஆய்வாளர் கன்டி பிரசாத், தென்மேற்கு பருவமழை தென் இந்தியாவில் அதிக அளவில் பெய்ய வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் வரை பெய்யும் மழை நீடித்து தொடர்ச்சியாக வடக்கிழக்கு பருவமழை அக்டோபரில் ஆரம்பிக்கும் என்றார். நவம்பர் மாதம் பருவமழை வேகமெடுக்கும் என்றும் பிரசாத் கூறியுள்ளார்.

எல் நினோ பாதிப்பு
எல் நினோவின் தாக்கம் காரணமாக மழையில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் இருந்தாலும் கடந்த 1997, 2006 கால கட்டத்தைப் போல பாதிக்காது என்று கூறினார்.
எல் நினோவால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பாதிக்கப்படும். சராசரியை விட குறைவாக மழை பொழிவு இருக்கும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நடப்பாண்டும் இயல்புதான்
கடந்த 2016 நாட்டின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைவாக இருந்ததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 1951 முதல் 2000 வரையிலான இடைப்பட்ட வருடங்களில் நாட்டில் சராசரி தென்மேற்கு மழை 89 செ.மீ ஆக இருந்தது. இந்த நிலையில் நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை இயல்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

வட இந்தியாவில் குறையும்
வட இந்தியாவில் நடப்பாண்டு பருவமழை குறைவாகவே பெய்யும் என்றும் நடப்பாண்டு மழை பற்றாக்குறையாகவே இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர் கூறியுள்ளார். வட இந்தியா மட்டுமல்ல தெற்கு தீபகற்ப பகுதி முழுவதுமே பருவமழை குறைவாகவே இருக்கும் என்றும் கணித்துள்ளனர் ஆய்வாளர்கள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications