என்னை எதிர்த்துப் பேச மிஷல் பயப்படவே மாட்டார்... ஒபாமா
டெல்லி: அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய பயணத்தின் கடைசி நிகழ்வாக ஆற்றிய உரையில், எல்லா பெண்களும் வலிமையும், திறமையுமானவர்கள். என்னை எதிர்த்து பேச என் மனைவி பயப்படவே மாட்டார் என்று கூறி கலகலப்பை ஏற்படுத்தினார்.
அவர் தனது இந்திய பயணத்தின் கடைசி நிகழ்ச்சியாக, நேற்று ஸ்ரீ போர்ட் அரங்கத்தில், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடையே பேசினார்.
அப்போது அவர் பெண்களைப் பற்றியும், தன்னுடைய மனைவி பற்றியும் உயர்வாக உரையாற்றினார்.

ராணுவத்தில் பெண்கள்:
அதில், "எனது இந்திய பயணத்தில் எனக்கு பிடித்த விஷயம், ராணுவத்தில் பெண்களை பார்த்ததுதான். குடியரசுத்தலைவர் மாளிகையில் எனக்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதைக்கு தலைமை தாங்கியவரும் ஒரு பெண்தான்.

ஆட்சியிலும் பெண்கள்:
இந்தியாவில், ஆட்சி நடத்துவது உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தங்களால் சாதிக்க முடியும் என்று பெண்கள் காண்பித்துள்ளனர். தலைவர்களில் பலர் பெண்கள்தான். இந்தியாவின் முன்னேற்றத்தில் இளம்பெண்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள்.

திறமைகளைப் புறக்கணிக்காதீர்:
பெண்கள் முன்னேறினால்தான் அந்த நாடும் முன்னேறும் என்பதை நாம் அனுபவபூர்வமாக உணர்ந்து இருக்கிறோம். ஒரு நாடு முன்னேற விரும்பினால், பெண்களின் திறமைகளை புறக்கணிக்கக்கூடாது.

கண்ணியமான நடவடிக்கை:
பெண்களுக்கு சுதந்திரமும், உரிமையும் கிடைப்பதை ஆண்கள் உறுதிப்படுத்த வேண்டும். நமது மகன்களுக்கு கிடைக்கும் அதே வாய்ப்புகள், மகள்களுக்கும் கிடைக்க வேண்டும். பெண்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்.

என் மனைவி வலிமையானவள்:
நான் ஒரு வலிமையான, திறமையான பெண்ணைத்தான் திருமணம் செய்துள்ளேன். என் மீது தவறு இருப்பதாக என் மனைவி கருதினால், என்னை எதிர்த்து பேச பயப்படவே மாட்டார்.

அழகான பெண்கள்:
என்னை சுற்றி எப்போதும் அழகான பெண்கள் உள்ளனர். என் மனைவியையும், 2 மகள்களையும்தான் சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.
-
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம் -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications