மும்பை அதிவேக ரயில் திட்டம் தோல்வி... அதிகாரிகளின் ஏமாற்று வேலையை காட்டிகொடுத்த ஆர்டிஐ
மும்பை புறநகருக்கு அதிவேக ரயிலை இயக்கும் திட்டம் தோல்வியடைந்து விட்டதாக தகவலறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மும்பை: காதிமான் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இணையாக மும்பையில் புறநகர் ரயிலை இயக்கும் திட்டம் தோல்வியில் முடிந்ததாகவும், இதனால் 60கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக தகவலறியும் உரிமை சட்டத்தில் மூலமாக தெரியவந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ. மனுவின் மூலம், மும்பை ரயில்வே விகாஸ் கார்பரேஷன், லக்னோவில் உள்ள ரெயில்வே வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு ஆகியவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டின் அதிகவேக காதிமான் எக்ஸ்பிரஸ் ரெயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இந்த வேகத்தை விட சற்று குறைச்சலாக 145 கிலோமீட்டர் வேகத்தில் மும்பையில் புறநகர் ரெயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டது.

கடந்த 2012ம் ஆண்டு இந்த அதிவேக புறநகர் ரயிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தூரிதமாக பணி நடைபெற்றதை பார்த்து விரைவில் அதிவேக ரயில் பயன்பாட்டிற்கு வரும் என்று அனைத்து தரப்பினரும் நம்பி வந்தனர். இதற்காக சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் இருந்து பிரத்யேகமாக ரயில் பெட்டிகள் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. தனியாக ரயில் இருப்பு பாதைகள், சிக்னல்கள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டன.
பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், குறிப்பிட்ட அந்த தண்டவாள பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மும்பை நகர், விரார், தஹானு ஆகிய இடங்களுக்கு இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் தோல்வியில் முடிந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. எதிர்ப்பார்த்த வேகத்தில் ரயிலை இயக்க முடியாததால் சாதாரண வேகத்திலேயே தான் ரயில் செலுத்த முடியும் என்பதையும், 80கிலோ மீட்டர் வேகத்தை கூட தாண்ட முடியாது என்பதையும் அதிகாரிகள் உணர்ந்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்த திட்டம் கைவிடப்பட்டு தற்போது, அதிவேக ஓட்டத்துக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த ரயில் பணிமனையில் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சிக்காக ரூ.60 கோடியை செலவு செய்து, அது வீணாய் போனதை ரயில்வே அதிகாரிகள் மறைத்த நிலையில், மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ. மனுவின் மூலமாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications