மும்பை அதிவேக ரயில் திட்டம் தோல்வி... அதிகாரிகளின் ஏமாற்று வேலையை காட்டிகொடுத்த ஆர்டிஐ
மும்பை புறநகருக்கு அதிவேக ரயிலை இயக்கும் திட்டம் தோல்வியடைந்து விட்டதாக தகவலறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மும்பை: காதிமான் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இணையாக மும்பையில் புறநகர் ரயிலை இயக்கும் திட்டம் தோல்வியில் முடிந்ததாகவும், இதனால் 60கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக தகவலறியும் உரிமை சட்டத்தில் மூலமாக தெரியவந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ. மனுவின் மூலம், மும்பை ரயில்வே விகாஸ் கார்பரேஷன், லக்னோவில் உள்ள ரெயில்வே வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு ஆகியவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டின் அதிகவேக காதிமான் எக்ஸ்பிரஸ் ரெயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இந்த வேகத்தை விட சற்று குறைச்சலாக 145 கிலோமீட்டர் வேகத்தில் மும்பையில் புறநகர் ரெயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டது.

கடந்த 2012ம் ஆண்டு இந்த அதிவேக புறநகர் ரயிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தூரிதமாக பணி நடைபெற்றதை பார்த்து விரைவில் அதிவேக ரயில் பயன்பாட்டிற்கு வரும் என்று அனைத்து தரப்பினரும் நம்பி வந்தனர். இதற்காக சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் இருந்து பிரத்யேகமாக ரயில் பெட்டிகள் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. தனியாக ரயில் இருப்பு பாதைகள், சிக்னல்கள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டன.
பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், குறிப்பிட்ட அந்த தண்டவாள பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மும்பை நகர், விரார், தஹானு ஆகிய இடங்களுக்கு இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் தோல்வியில் முடிந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. எதிர்ப்பார்த்த வேகத்தில் ரயிலை இயக்க முடியாததால் சாதாரண வேகத்திலேயே தான் ரயில் செலுத்த முடியும் என்பதையும், 80கிலோ மீட்டர் வேகத்தை கூட தாண்ட முடியாது என்பதையும் அதிகாரிகள் உணர்ந்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்த திட்டம் கைவிடப்பட்டு தற்போது, அதிவேக ஓட்டத்துக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த ரயில் பணிமனையில் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சிக்காக ரூ.60 கோடியை செலவு செய்து, அது வீணாய் போனதை ரயில்வே அதிகாரிகள் மறைத்த நிலையில், மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ. மனுவின் மூலமாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications