இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தினர் கிரிக்கெட் வாரியத்தில் இருக்க தடை: சுப்ரீம் கோர்ட்!!
டெல்லி: என்.சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையோர் எவருமே இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இடம்பெறக் கூடாது என்று உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
ஐ.பி.எல்.பிக்ஸிங் தொடர்பான முத்கல் கமிட்டி அறிக்கை மீது உச்சநீதிமன்றத்தில் இன்றும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது உச்சநீதிமன்றம் அதிரடியான சில பரிந்துரைகளை முன்வைத்தது.
பிக்ஸிங் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நடப்பு ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது; இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவராக சுனில் கவாஸ்கர் அல்லது மூத்த வீரர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறியது.

அத்துடன் தற்போதைய கிரிக்கெட் வாரியத் தலைவர் என்.சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையோர் எவருமே இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இடம்பெறக் கூடாது என்றும் கூறியது.
இந்தியா சிமெண்ட்ஸின்.. சீனி, டோணி, சுந்தர்ராமன்
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சீனிவாசன், கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கிறார்.
இந்தியா சிமெண்ட்ஸ்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பணியாளராக இருக்கும் டோணிதான் இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார்.
அதேபோல் ஐ.பி.எல். போட்டிகளை முன்னின்று நடத்துகிற சுந்தர் ராமனு, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்.
சீனி, டோணியால் தடை
இவர்களில் சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பகிரங்கமாக தெரிவித்த கையோடு, கவாஸ்கர் அல்லது மூத்த வீரரை கிரிக்கெட் வாரியத் தலைவராக நியமிக்க பரிந்துரைத்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் இந்தியா சிமெண்ட்ஸ் பணியாளர் என்பதற்காகத்தான் பிக்ஸிங்கில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பனை பாதுகாக்கும் வகையில் பொய்யான வாக்குமூலத்தை கேப்டன் டோணி கொடுத்தார் என்றும் உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்தே இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த எவருமே கிரிக்கெட் வாரியத்தில் இடம்பெறக் கூடாது என்ற பரிந்துரையை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications