உலக மகளிர் தினம்: 1,500 டீக்கடைகளில் மோடி கலந்துரையாடல்
டெல்லி: மகளிர் தினத்தன்று சர்வதேச அளவில் 1,500 டீக்கடைகளில் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மோடி கலந்துரையாடுகிறார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க. ‘நமோ' டீக்கடைகளை நாடுதோறும் அமைத்து பிரசாரம் செய்து வருகிறது. இதற்கு மக்களிடையே பெருமளவு வரவேற்பு உள்ளது.
டீ கடைகளில் டீ சாப்பிட வருபவர்களுடன் பிரதமர் வேட்பாளர் கலந்துரையாடினால் எப்படி இருக்கும் என்று யோசித்த பாஜக அதை வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டியுள்ளது.

1000 டீ கடைகளில் பேசிய மோடி
பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி, கடந்த மாதம் 1000 டீ கடைகளில் டீ குடிக்க வருபவர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சி வெற்றியடைந்ததை தொடர்ந்து இதனை விரிவுபடுத்த பா.ஜ.க. திட்டமிட்டது.
மகளிர் தினத்தில் மோடி
மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தையொட்டி, சர்வதேச அளவில் இந்த நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, 15 வெளிநாடுகளில் உள்ள 30 இடங்கள் உள்பட மொத்தம் 1,500 இடங்களில் மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பெண்கள் மேம்பாடு
டெல்லியில் இருந்து நரேந்திரமோடி டீக்கடை வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். கடந்த முறை சிறந்த நிர்வாகம் பற்றி பேசிய அவர் இந்த முறை பெண்கள் மேம்பாடு பற்றி பதில் அளிக்க உள்ளார்.
இடங்கள் தேர்வு
மகளிர் தினத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கான இடங்கள் விரைவில் முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications