Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமணத்திற்கு வந்தவர்களை உடல் உறுப்புத்தானம், ரத்ததானம் செய்ய வைத்த மஹா. புதுமணத்தம்பதி!

நாசிக்கில் நடந்த திருமணத்தில் மணமக்கள் உட்பட 700 உடல் உறுப்புத்தானம் செய்தனர்.

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் மணமக்கள் உட்பட திருமணத்திற்கு வந்த உறவினர்கள் 700 பேர் உடல் உறுப்புத் தானம் செய்த புதுமையான திருமணம் நடந்துள்ளது.

மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள நாஷிக் பகுதியைச் சேர்ந்தவர்கள் வர்ஷா பாகர் மற்றும் ஸ்வப்நில் கொதவாடே. இருவருமே அரசு ஊழியர்கள் ஆவர்.

nashik wedding vow to donate organs

மக்களுக்கு சேவை செய்யும் அரசு பணியில் உள்ள மணமக்கள் இருவருக்கும் சமூகசேவையிலும் ஈடுபாடு அதிகம். எனவே, தங்களது திருமணத்தையும் முன்னுதாரண நிகழ்வாக்க அவர்கள் விரும்பினர்.

அதன்படி, கடந்த ஞாயிறன்று நடந்த இவர்களது திருமணத்தில் மணமக்கள் இருவரும் தங்களது உடல் உறுப்புகளைத் தானம் செய்தனர். அதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் மற்றும் உறவினர்களும் தங்கள் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக பதிவு செய்தனர். மணமக்களையும் சேர்த்து மொத்தம் 700 பேர் வரை உடலுறுப்பு தானம் செய்திருக்கின்றனர்.

அத்துடன் திருமண விழாவில் ரத்த தானம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் 60 பேர் ரத்த தானம் அளித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+