காஷ்மீர் சட்டசபையில் பாஜகவால் பஞ்சாயத்து.. எதிரொலித்தது பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்!
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எதிரொலித்தது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பாஜக கிளப்பிய பஞ்சாயத்தால் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்கிற கோஷத்தை தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏக்கள் எழுப்பினர்.
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது சபாநாயகர் கவீந்தர் குப்தா, ஜம்மு நகரில் ராணுவ முகாம் மீதான தாக்குதலில் ரோஹிங்யா முஸ்லிம்கள் ஈடுபடுத்தப்பட்டனர் என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்தது. தேசிய மாநாட்டு கட்சியின் அலி முகமது சாகர் பேசுகையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இலக்கு வைத்து குற்றம் சாட்டக் கூடாது. பாதுகாப்பு குறைபாடுகளுக்காக மத்திய அரசைத்தான் குறைகூற வேண்டும்.
இந்த விவகாரத்துக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண மத்திய அரசு பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்றார். அப்போது பாஜக எம்.எல்.ஏக்கள் எழுந்து பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதற்கு பதிலடி தர, பாகிஸ்தான் ஜிந்தாபாத் என தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏக்கள் முழக்கம் எழுப்பினர். இதையடுத்து சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சபாநாயகர் முகமது அக்பர் லோனே, நான் ஒரு முஸ்லிம். என்னுடைய உணர்வுகளை பாஜக எம்.எல்.ஏக்கள் காயப்படுத்துகின்றனர். ஆகையால் என்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் முழக்கங்களை எழுப்பும் நிலை உருவானது என்றார்.
-
பாகிஸ்தான் சட்டையை பிடிக்கும் அமீரகம்! "அந்த ₹25,000 கோடியை உடனே திருப்பி தாங்க.." எகிறும் நெருக்கடி -
"பில் கட்டக் கூட காசு இல்லையா?" கம்பி நீட்டிய பாகிஸ்தான்.. இது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications