பெங்களூர் சிறையில் சீருடை அணியாமல் 'சிக்கிய' சசிகலா!
பெங்களூர்: பெங்களூர் மத்திய சிறையில் சசிகலா சீருடை அணியாமல் இருந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் 4 வருட தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட சசிகலா, பெங்களூருவிலுள்ள, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சிறைச்சாலையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுக்கப்படுகின்றன என்று ஐபிஎஸ் அதிகாரி ரூபா தகவல் வெளியிட்டார். சசிகலா ஷாப்பிங் சென்றதாகவும் வீடியோ வெளியானது.

சித்தராமையா ஆதரவு?
சசிகலாவுக்கு சலுகை செய்து தர முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டதாக முன்னாள் ஏடிஜிபி சத்யநாராயணா, விசாரணை கமிஷனில் அளித்த வாக்குமூலம் இந்த பரபரப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. சசிகலாவுக்கு சிறப்பு சலுகை செய்துதர சொல்லவில்லை என்றும், சசிகலாவுக்கு சிறை விதிமுறைப்படி சலுகை அளிக்க கூறியதாகவும் சமாளித்தார் சித்தராமையா. இருப்பினும் கர்நாடக எதிர்க்கட்சிகள் சித்தராமையாவுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

மகளிர் ஆணைய தலைவி
இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் தேசிய மகளிர் ஆணைய தலைவி (கூடுதல்) ரேகா சர்மா திடீரென ஆய்வு செய்தார். அப்போது, பெண் கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறை சீருடை அணியாமல் சாதாரண ஆடைகள் அணிந்திருந்ததை அவர் பார்த்து கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.
சசிகலா, இளவரசி ஆகியோர் சாதாரண ஆடைகள் அணிவதற்கு எப்படி அனுமதி வழங்கினீர்கள்? என்று அங்கு உள்ள சிறை அதிகாரிகளிடம் ரேகா சர்மா கேட்டதாகவும், சாதாரண உடைகள் உங்களுக்கு எப்படி கிடைத்தது சசிகலாவிடம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரேகா சர்மா கேள்விகளுக்கு சசிகலா அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.

சாதாரண தண்டனை
சசிகலா இருந்த சிறை அறைக்குள் சென்று ரேகா சோதனையிட்டபோது, அங்கே பல்வேறு வகையான வண்ண ஆடைகள் இருந்ததாக தெரிகிறது. ஆனால், சிறை அதிகாரிகளோ, சசிகலா சாதாரண தண்டனை கைதி, கடுங்காவல் தண்டனை கைதி இல்லை என்பதால், அவர் சீருடை அணிய தேவையில்லை என விளக்கம் அளித்துள்ளனர். இதையடுத்து பெண் கைதிகளின் குறைகளை ரேகா சர்மா கேட்டறிந்தார்.

ரூபா மறுப்பு
இதுகுறித்து ரூபாவிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பியபோது, பெங்களூர் மத்திய சிறை, விதிமுறைகளில், இப்படி ஒரு சலுகை குறிப்பிடப்படவில்லை என்றும், அனைவருக்குமே சீருடை கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளார். எனவே சசிகலா சாதாரண உடையில் இருந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications