விதவை மருமகளை பராமரிக்க மாமனாரை கட்டாயப்படுத்த முடியாது: டெல்லி கோர்ட் அதிரடி தீர்ப்பு
டெல்லி: கணவரை இழந்த மருமகளை காப்பாற்றும் பொறுப்பு மாமனாருக்கு உள்ளதாக எந்த ஒரு சட்டத்திலும் இடமில்லை என்று டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனக்கு மாமனார் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கணவரை இழந்த பெண் தாக்கல் செய்த மனுவை டிஸ்மிஸ் செய்து, இதுபோன்ற ஒரு தீர்ப்பை அளித்துள்ளது டெல்லி கோர்ட். மாமனார் சம்பாதிக்கிறாரோ, இல்லையோ அதெல்லாம், மருமகளை கவனித்துக்கொள்ளும் பிரிவில் வராது என்றும் டெல்லி கோர்ட் தடாலடியாக கூறியுள்ளது.

மாமாதம் ரூ.35 ஆயிரம் வேண்டும்
டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் கணவரை இழந்த பெண் ஒருவர் வித்தியாசமான கோரிக்கையுடன் மனுத் தாக்கல் செய்திருந்தார். கணவரை இழந்த தனக்கு, மாமனார் மாதம் ரூ.35ஆயிரத்தை உதவித் தொகையாக வழங்க உத்தரவிட வேண்டும் என்பதே அந்த கோரிக்கை.

படிப்பு கம்மி, பென்சன் மட்டும்தான்
9ம் வகுப்பு வரைதான் தான் படித்துள்ளதாகவும், விதவைகளுக்கான பென்சனாக ரூ.1000 மட்டுமே தனக்கு கிடைத்துவருவதாகவும், எனவே மாமனாரிடமிருந்து நிதி உதவி பெற்றுத் தரும்படியும் அந்த பெண் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

மாமனாருக்கு பொறுப்பு கிடையாது
இந்த மனுமீதான விசாரணை முடிவில் நீதிபதி சில்பி ஜெயின் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளார். நீதிபதி கூறியுள்ளதாவது: மாமனார் பணம் சம்பாதிக்கிறாரோ, அல்லது சும்மா இருக்கிறாரோ... அதெல்லாம் சட்டத்திற்கு தேவையில்லை. ஏனெனில், மருமகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு மாமனாருக்கு இருப்பதாக எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை.

மாமனாரே வேலையில்லாமல் உள்ளார்..
இந்த வழக்கை பொறுத்தளவில், மாமனார் வயது முதிர்ந்தவராகவும், வேலைக்கு போகாமலும் உள்ளார். அவரை நம்பி மனைவியும் உள்ளார். ஆனால் மருமகளுக்கோ அரசு அளிக்கும் விதவை பென்சன் வந்து கொண்டுள்ளது. எனவே, மாமனாரும், மருமகளும் ஒரே மாதிரியான அந்தஸ்தில்தான் உள்ளனர். எப்படிப் பார்த்தாலும், மாமனாரிடமிருந்து பணம் கேட்பது சரியாக தெரியவில்லை. இவ்வாறு நீதிபதி கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications