நான் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மாட்டேன்- சொல்வது ராஜ்நாத்சிங்
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக தாம் முன்நிற்கமாட்டேன் என்று அக்கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் லக்னோ தொகுதியில் ராஜ்நாத்சிங் போட்டியிடுகிறார். இத்தொகுதியில்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போட்டியிட்டிருந்தார்.
மேலும் லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் ராஜ்நாத் சிங் தம்மை பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னிறுத்தக் கொள்ளவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த ராஜ்நாத்சிங், நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்பது கட்சி மேற்கொண்ட ஒருமித்த முடிவு.

அவரை முன்னிறுத்திதான் பாரதிய ஜனதா கட்சி வாக்கு சேகரித்து வருகிறது. இதனால் நான் ஒரு பிரதமர் வேட்பாளரா என்ற கேள்விக்கே இடமில்லை.
ராஸ்தானின் பார்மர் தொகுதியில் சீட் கொடுக்கப்படாததால் மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரை கட்சியில் இருந்து நீக்கும் நிலைக்கு அவர் என்னை தள்ளிவிடமாட்டார் என கருதுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications