பீடா கடை வைக்கலாம், மாடு மேய்க்கலாம்!.. அரசு வேலை எதற்கு?.. திரிபுரா முதல்வர் புதிய சர்ச்சை
அரசு வேலைக்கு பதில் இளைஞர்கள் பீடா கடை போட்டு பிழைத்துக் கொள்ளலாம் இல்லையென்றால் மாடு மேய்க்கலாம் என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் கருத்து தெரிவித்துள்ளார்.
கவுகாத்தி: அரசு வேலைக்கு பதில் இளைஞர்கள் பீடா கடை போட்டு பிழைத்துக் கொள்ளலாம் இல்லையென்றால் மாடு மேய்க்கலாம் என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே மிகவும் ஏழ்மையான முதல்வர் என்று திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் பிரபலம் அடைந்து இருந்தார். ஆனால் தற்போதைய புதிய முதல்வர் பிப்லாப் தேப் மிக மோசமான சில சர்ச்சைகள் காரணமாக பிரபலம் அடைந்து வருகிறார்.

முதலில் அவர், விழா ஒன்றில் பேசும் போது மஹாபாரத காலத்திலேயே இண்டர்நெட் இருந்தது என்று கூறி காமெடி செய்தார். இது இணையம் முழுக்க வைரல் ஆனது. அதன்பின் உலக அழகி பட்டம் வாங்கியவரான டயானா ஹெய்டன் ஒன்றும் அவ்வளவு அழகு இல்லை, ஐஸ்வர்யாராய்தான் அழகு என்று கருத்து தெரிவித்து சர்ச்சையானார்.
அதன்பின் சிவில் இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்குதான் சிவில் சர்விஸ் தேர்வுகள் எழுதும் அளவிற்கு அறிவு இருக்கிறது. கட்டிடம் பற்றி படித்தவர்கள் நாட்டை நன்றாக கட்டி அமைப்பார்கள். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அந்த அளவிற்கு அறிவு இருக்கிறது என்று கூறினார்.
இந்த நிலையில் தற்போது அரசு வேலைக்கு பதில் இளைஞர்கள் பீடா கடை போட்டு பிழைத்துக் கொள்ளலாம் இல்லையென்றால் மாடு மேய்க்கலாம் என்று கூறியுள்ளார். பீடா கடை போடுவது என்பது சுய தொழில், மாடு மேய்ப்பது மிகவும் புனிதமான தொழில், ஏன் மக்கள் அரசாங்கத்தை நம்பி வாழ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் அதோடு நிறுத்திக் கொள்ளாமல், மாடு மேய்ப்பது, பீடா கடை போடுவதன் மூலம் 5 லட்சம் வரை வருடம் சம்பாரிக்க முடியும். இதற்கு அரசிடம் இருந்து 75,000 ரூபாய் லோன் கூட எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன் மோடியின், அமித்ஷாவும் பக்கோடா கடை போடுவது கூட வேலை வாய்ப்புதான் என்று கூறியுள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications