அதிகரிக்கும் பதற்றம்.. எல்லையில் இந்திய வீரர்கள் குவிப்பு.. சீனாவுக்கு பதிலடி கொடுக்க அதிரடி
லடாக்: கிழக்கு லடாக் எல்லையில் உள்ள பாங்காங் டிசோ ஏரியில் 2வது பாலம் கட்டி பதற்றத்தை ஏற்படுத்துவதால் முன்னெச்சரிக்கையாக எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாங்கிகள், ராணுவ வீரர்கள் விரைந்து செல்ல வசதியாக பாலம், சாலைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
இந்தியா-சீனா இடையே அடிக்கடி எல்லை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. சீனா, இந்தியாவின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
சீனாவின் இத்தகைய செயல்பாட்டுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் எல்லை அருகே சீனா தனது உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இது செயற்கைக்கோள் படங்களின் மூலம் இந்தியா உறுதி செய்தது.

சீனாவின் 2வது பாலம்
கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் டிசோ ஏரியில் முதலில் சீனா தரப்பில் புதிதாக பாலம் கட்டப்பட்டது. தற்போது 2வது பாலம் கட்டும் பணியை சீன ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இந்த 2வது பாலம் 11 மீட்டர் அகலத்தில் 70 டன் எடையைக் கையாளும் திறன் கொண்டதாக கட்டப்பட்டு வருகிறது. இது பாங்காங் டிசோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை இணைக்கும் வகையிலும், அதன் அருகே ராணுவ முகாமும் உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் எல்லை பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதன்மூலம் ராணுவ தளவாடங்கள், வீரர்களை சீனா எளிதில் எல்லைப்பகுதிக்கு கொண்டு வர முடியும்.

போர் விமானங்கள்
மேலும் சீனா தரப்பில் ருடாக் தளம், பாங்காங் டசோவின் தெற்கு பகுதி, பிரச்சனைக்குரிய சின்ஜியாங் இராணுவ பகுதியில் உள்ள சியாதுல்லா ஆகிய இடங்களில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஹோட்டன் விமானப்படை தளத்தில் போர் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராணுவ தளபதி ஆய்வு
இதனால் எல்லையில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் வகையில் சீனா செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்தியாவின் புதிய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டி இந்த மாத துவக்கத்தில் கிழக்கு லடாக்கில் ஆய்வு செய்தார். அப்போது, எல்லையில் இந்திய ராணுவத்தின் செயல்பாடு பற்றியும், வீரர்களின் நிலைநிறுத்தங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய வீரர்கள் நிலைநிறுத்தம்
கிழக்கு லடாக்கில் 1597 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்தியா-சீனா இடையே எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதி உள்ளது. இங்கு இந்திய ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டு இருப்பதை மனோஜ் பாண்டே ஆய்வு செய்தார். அப்போது இந்தியா ராணுவத்தின் செயல்பாடுகளை பார்த்து அவர் திருப்தி அடைந்தார்.

முன்னெச்சரிக்கை பணிகள்
இந்நிலையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் முன்னெச்சரிக்கையாகவும் இந்திய ராணுவம் செயல்பட்டு வருகிறது. அதன்படி இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவசர காலத்தில் டாங்கிகள் மற்றும் ராணுவ தளவாடங்களை வேகமாக டவுலெட் பெக் ஓல்டி வரை எடுத்து செல்ல வசதியாக கல்வான் ஆற்றின் மீதான 7 பாலங்கள், சாலைகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு முன்பு நடந்தது என்ன?
முன்னதாக 2020 மே 5ல் இந்தியா- சீனா இடையே பாங்காங் ஏரி பகுதியில் பிரச்சனை ஏற்பட்டது. கிழக்கு லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் இடையே மோதல் நடந்தது. அதேபோல் 2020 ஜூன் மாதம் 15ல் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். மொத்தம் 42 சீன வீரர்கள் இறந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் தற்போது எல்லையில் இந்திய வீரர்கள் உஷார் நிலையில் உள்ளனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications