பெண்களின் பாதுகாப்பிற்காக செல்போன்களில் 'பேனிக் பட்டன்': சென்போன் நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சு
டெல்லி: பெண்களின் பாதுகாப்பை கருதி பேனிக் பட்டன் கொண்ட செல்போன்களை தயாரிக்க செல்போன் நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பாஜகவின் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு சார்பில் மாணவர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
பெண்களின் பாதுகாப்பிற்காகவும், அவசர சூழலில் இருந்து தப்பிக்கவும் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசனை கேட்கப்பட்டது. அதற்கு பலர் அவசர மெசேஜ் அனுப்பும் வசதியுடன் கூடிய நெக்லஸ், பிரேஸ்லெட், மோதிரம் அணியலாம் என்று பரிந்துரைத்தனர். நாம் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்.
பெண்கள் என்ன கைதிகளா, அவை அனைத்தையும் அணிந்து செல்ல. மேலும் அந்த ஆபரணங்கள் அனைத்து பெண்களுக்கும் கிடைக்கும் என்றும் கூற முடியாது. அதனால் செல்போன்களில் பேனிக்(பீதி) பட்டனை அறிமுகப்படுத்தும் ஐடியாவை அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி செல்போன்களில் ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய பேனிக் பட்டன் வைக்கப்படும். பெண்கள் ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொண்டால் அந்த பட்டனை அழுத்தினால் அவர் இருக்கும் இடத்தின் விபரம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள எண்களுக்கு மெசேஜ் மூலம் செல்லும். பேனிக் பட்டன் வைப்பது குறித்து செல்போன் தயாரிப்பாளர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த புதிய திட்டம் சில மாதங்களில் அமல்படுத்தப்படும்.
பாஜக அரசு பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்துள்ளனது. போதிய அளவுக்கு திட்டங்கள் உள்ளன. அதை அமல்படுத்துவதில் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications