சிறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் நிஜம்தான்.. கர்நாடக காங். தலைவரின் பிஏ பரபர வாக்குமூலம்
சசிகலாவுக்காக சிறை அதிகாரிகளுக்கு ரூ2 கோடி லஞ்சம் தந்தது உண்மையே என கர்நாடகா காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரின் பிஏ பிரகாஷ் பரபரப்பு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
டெல்லி: சசிகலா சொகுசாக இருக்க பெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு ரூ2 கோடி லஞ்சம் தந்தது உண்மைதான் என கர்நாடகா காங்கிரஸ் கட்சி தலைவர் பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷ் டெல்லி போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக வெளியாகி உள்ள தகவல் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கை டெல்லி போலீஸ் விசாரித்து வருகிறது. டெல்லியில் தினகரனின் புரோக்கர் சுகேஷூக்கு ரூ10 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது புகார்.

மல்லியுடன் தொடர்பில் பிரகாஷ்
ரூ10 கோடியை ஹவாலா மூலம் சுகேஷூக்கு பணம் கொடுத்தது தினகரனின் உதவியாளர் மல்லிகார்ஜூனா என்கிறது டெல்லி போலீஸ். இந்த மல்லிகார்ஜூனாவின் செல்போன்களை ஆராய்ந்த டெல்லி போலீஸ் பிரகாஷ் என்பவருடன் அடிக்கடி பேசியிருப்பதை கண்டுபிடித்தது.

பரமேஸ்வரின் பிஏ
கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரின் உதவியாளர்தான் இந்த பிரகாஷ். கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் கர்நாடகா மாநில உள்துறை அமைச்சர் பதவியை பரமேஸ்வர் ராஜினாமா செய்திருந்தார்.

டெல்லி போலீசில் வாக்குமூலம்
பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். அப்போது, சசிகலாவுக்காக கர்நாடகா சிறை அதிகாரிகளுக்கு ரூ2 கோடி லஞ்சமாக கொடுத்ததாக மல்லிகார்ஜூனா தம்மிடம் கூறியிருந்தார். ஆனால் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என வாக்குமூலம் அளித்திருக்கிறார் பிரகாஷ்.

பரமேஸ்வருக்கு தொடர்பு இல்லை
சசிகலாவுக்காக ரூ2 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் பரமேஸ்வருக்கு எந்த ஒரு தொடர்புமே இல்லை எனவும் பிரகாஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளதாகவும் டெல்லி போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இத்தகவலை டெக்கான் க்ரானிக்கல் ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications