சிறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் நிஜம்தான்.. கர்நாடக காங். தலைவரின் பிஏ பரபர வாக்குமூலம்
சசிகலாவுக்காக சிறை அதிகாரிகளுக்கு ரூ2 கோடி லஞ்சம் தந்தது உண்மையே என கர்நாடகா காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரின் பிஏ பிரகாஷ் பரபரப்பு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
டெல்லி: சசிகலா சொகுசாக இருக்க பெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு ரூ2 கோடி லஞ்சம் தந்தது உண்மைதான் என கர்நாடகா காங்கிரஸ் கட்சி தலைவர் பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷ் டெல்லி போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக வெளியாகி உள்ள தகவல் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கை டெல்லி போலீஸ் விசாரித்து வருகிறது. டெல்லியில் தினகரனின் புரோக்கர் சுகேஷூக்கு ரூ10 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது புகார்.

மல்லியுடன் தொடர்பில் பிரகாஷ்
ரூ10 கோடியை ஹவாலா மூலம் சுகேஷூக்கு பணம் கொடுத்தது தினகரனின் உதவியாளர் மல்லிகார்ஜூனா என்கிறது டெல்லி போலீஸ். இந்த மல்லிகார்ஜூனாவின் செல்போன்களை ஆராய்ந்த டெல்லி போலீஸ் பிரகாஷ் என்பவருடன் அடிக்கடி பேசியிருப்பதை கண்டுபிடித்தது.

பரமேஸ்வரின் பிஏ
கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரின் உதவியாளர்தான் இந்த பிரகாஷ். கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் கர்நாடகா மாநில உள்துறை அமைச்சர் பதவியை பரமேஸ்வர் ராஜினாமா செய்திருந்தார்.

டெல்லி போலீசில் வாக்குமூலம்
பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். அப்போது, சசிகலாவுக்காக கர்நாடகா சிறை அதிகாரிகளுக்கு ரூ2 கோடி லஞ்சமாக கொடுத்ததாக மல்லிகார்ஜூனா தம்மிடம் கூறியிருந்தார். ஆனால் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என வாக்குமூலம் அளித்திருக்கிறார் பிரகாஷ்.

பரமேஸ்வருக்கு தொடர்பு இல்லை
சசிகலாவுக்காக ரூ2 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் பரமேஸ்வருக்கு எந்த ஒரு தொடர்புமே இல்லை எனவும் பிரகாஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளதாகவும் டெல்லி போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இத்தகவலை டெக்கான் க்ரானிக்கல் ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications