பெற்றோரை கொன்று எரித்து தப்பியோடிய சைக்கோ மகன் கைது - கேரள போலீஸ் தீவிர விசாரணை
திருவனந்தபுரம்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் வேலை பார்த்த ஓய்வு பெற்ற பேராசிரியர் மற்றும் மனைவி உட்பட நான்கு பேரை துண்டு துண்டாக வெட்டி எரித்து கொன்றுள்ளார் பேராசிரியரின் சைக்கோ மகன். திருவனந்தபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய மகனை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் வரலாறு பேராசிரியராக வேலை பார்த்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற அழகியமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ராஜதங்கம்.
இவர் தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரம் நந்தங்கோடு பகுதியில் தனது மனைவி ஜீன்பத்மாவுடன் வசித்து வந்தார். ஜீன்பத்மா இதய சிகிச்சை மருத்துவராகும். அரசு மருத்துவமனையில் பணியாற்றினார்.

சைக்கோ மகன்
இத்தம்பதிகளின், மகள் கரோலின் கேரள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். மகன் கேடல் ஜீன்சன்ராஜா. மருத்துவர் படிப்பு படித்த இவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கம்யூட்டர் நிறுவனம் நடத்த முயற்சி மேற்கொண்டு வந்தார்.

தப்பியோட்டம்
இந்நிலையில் இன்று அந்த வீட்டில் இருந்து மகன் கேடல் ஜீன்சன்ராஜ் ரத்த கரை படிந்த துணியுடன் காம்போண்ட் சுவர் ஏறி குதித்து ஓடுவதை பார்த்த அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அவரது வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்து வீட்டில் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த நான்கு பேரும் துண்டு துண்டாக வெட்டி எரிந்துகொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸ் விசாரணை
இது சம்பந்தமாக திருவனந்தபுரம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு வந்த போது நான்கு உடல்களும் எழுபது சதவீதம் எரித்த நிலையில் காணப்பட்டது இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தியபோது அவரது மகன் நான்கு பேரையும் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துவிடு தப்பி ஓடிய தடயங்கள் கிடைத்ததாக தெரிகிறது.

மகன் கைது
மகனின் புகைப்படத்தை வெளியிட்டு 9497990007, 9497987006, 9747001090 ஆகிய எண்களில் இவரை பற்றி தெரிந்தால் தெரிவிக்க போலீசார் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். தொடர்ந்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மகன் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடிவந்த நிலையில் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் வைத்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம், காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications