கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா உடல்நிலையில் முன்னேற்றம்.. மருத்துவர்கள் அறிவிப்பு
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எம்.எஸ். ராமைய்யா மருத்துவமனை அறிவித்துள்ளது.
பெங்களூரு: மறைந்த பிரபல நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா, உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவியான பர்வதம்மா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 14ம் தேதி பெங்களூரில் உள்ள எம்.எஸ். ராமைய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கன்னட திரையுலகில் முன்னிலையில் இருக்கும் திரைப்படத் தயாரிப்பாளரான பர்வதம்மாவின் வயது 77. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன், அவரது உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வேகமாக வதந்திகள் பரவின. தனது தாய் நன்றாக இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவரது மகனும் நடிகருமான சிவராஜ்குமார் வேண்டுகோள்விடுத்தார்.

உணர்வுடன்..
இந்நிலையில், பர்வதம்மாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். பர்வதம்மா உணர்வு நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னேற்றம்
மேலும், பர்வதம்மா கண் திறந்து பார்ப்பதாகவும், கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைக்குப் பின்னர், அவரது சிறுநீரில் அதிகமாக இருந்த உப்பின் அளவு குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அவர் இன்னும் வெண்டிலேஷன் கருவியின் உதவி கொண்டு சுவாசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் குழு
எம்.எஸ். ராமைய்யா மருத்துவமனையில், சஞ்சய் குல்கர்னி, ரத்னா, நளினி கிளாரா, மகேஷ், கார்த்திக் ஆகியோர் கொண்ட மருத்துவர்கள் குழு பர்வதம்மா உடல்நிலையை நேரடியாக கண்காணித்து வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார் பர்வதம்மா.

போலீஸ் பாதுகாப்பு
பர்வதம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைப் பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications