எல்லாம் இருக்கட்டும், அவ்வளவு பாதுகாப்பான பதன்கோட் தளத்திற்குள் தீவிரவாதிகள் எப்படி நுழைந்தார்கள்?
பதன்கோட்: பாதுகாப்பான பதன்கோட் விமானப்படை தளத்திற்குள் தீவிரவாதிகள் எப்படி நுழைந்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.
ஒவ்வொரு முறை தீவிரவாத தாக்குதல் நடந்த பிறகும் எது தவறாக போயிருக்கும் என ஆய்வு நடத்தப்படும். பதன்கோட் தாக்குதலை பொருத்தவரை தீவிரவாதிகளை அழிக்க ராணுவம் ஏன் முன்வரவில்லை என்ற கேள்வி எழுகிறது.
நாட்டிலேயே பாதுகாப்பு படையைச் சேர்ந்த 4 மற்றும் 9வது துணை ராணுவப்படை போன்று தீவிரவாதிகளை எதிர்த்து யாராலும் போராட முடியாது. ஆனால் அந்த இரண்டு யூனிட் வீரர்களும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியில் உள்ளனர். பதன்கோட்டில் தேசிய பாதுகாப்பு படையினருக்கு பதில் அவர்களை பணியமர்த்தியிருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

பதன்கோட் விமானப்படை தளத்திற்கு யார் பொறுப்பு என்பதே தெரியவில்லை. மேலும் அந்த தளத்தை தீவிரவாதிகள் தாக்கப் போவதாக உளவுத் துறை தெரிவித்தும் ஏன் தேசிய பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தேசிய பாதுகாப்பு படையினருக்கு பதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 4 மற்றும் 9வது துணை ராணுவப்படையை அனுப்பியிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்திருந்தால் தீவிரவாதிகளை அழிக்க இவ்வளவு நேரம் எடுத்திருக்க மாட்டார்கள் என்கிறார்கள் நிபுணர்கள்.
2001ம் ஆண்டு நாடாளுமன்றம் தாக்கப்படும் முன்பு தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவ தளத்தை தாக்க முயற்சித்தனர். அவர்கள் ராணுவ தளத்தின் சுவரில் ஏறும்போதே துணை ராணுவத்தினர் அவர்களை சுட்டுக் கொன்றுவிட்டனர்.
பதன்கோட் விமானப்படை தளத்தில் இருந்த பொருட்கள் சேதம் அடையாமல் பாதுகாப்பு படையினர் பார்த்துக் கொண்டனர் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் அந்த விமானப்படை தளத்திற்குள் எப்படி நுழைந்தார்கள் என்பது தான் புரியவில்லை. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்தபோது எல்லாம் பாகிஸ்தான் பதன்கோட் விமானப்படை தளத்தை தாக்கத் தான் குறி வைத்தது. 10 அடி உயர சுவரில் தீவிரவாதிகள் எப்படி ஏறினார்கள் என்று தெரியவில்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
முதலில் 2 தீவிரவாதிகள் விமானப்படை தளத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த நேரத்தில் பிற தீவிரவாதிகள் உள்ளே நுழைந்ததாக புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. எல்லாம் இருக்கட்டும் அவ்வளவு பாதுகாப்பான தளத்திற்குள் தீவிரவாதிகள் எப்படி நுழைந்தார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications