குளித்துக் கொண்டிருந்த ஐடி ஊழியரை ரகசியமாக செல்போனில் படம் பிடித்த பெயிண்டர் கைது!
பெங்களூரு: பில்டிங்கிற்கு பெயிண்ட் அடிக்க வந்த இடத்தில், ஐடி நிறுவன பெண் ஊழியர் குளிப்பதை செல்போனில் படம் எடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு பிடிஎம் லேஅவுட் 1வது ஸ்டேஜில் பி.ஜி எனப்படும் பணிக்கு செல்லும் பெண்களுக்கான தனியார் விடுதி உள்ளது. இங்கு சுமார் 30 பெண்கள் தங்கியபடி வேலைக்கு சென்று வருகின்றனர்.

அதில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாளவிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஐடி நிறுவன ஊழியரும் தங்கியிருந்தார். சம்பவத்தன்று காலை 8 மணியளவில், குளிப்பதற்காக மாளவிகா பாத்ரூம் சென்றார். குளித்துக் கொண்டிருந்தபோதுதான் எதேர்ச்சையாக ஜன்னல் வழியாக வெளியே பார்த்துள்ளார். பக்கத்து பில்டிங்கில் ஒரு வாலிபர் இவர் குளிப்பதை செல்போனில் படம் எடுத்தபடி நின்றது அப்போது தெரியவந்தது.
இதையடுத்து, ஆடைகளை உடுத்தியபடி, பாத்ரூமை விட்டு வெளியே ஓடிவந்த மாளவிகா, விடுதி உரிமையாளரிடம் விஷயத்தை கூறியுள்ளார். உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார் விடுதி உரிமையாளர்.
போலீசார் வந்து விசாரணை நடத்தியபோது பக்கத்து பில்டிங்கிற்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு வந்த நபர்தான் வீடியோ எடுத்தது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்புதான் அந்த வாலிபர் பெயிண்ட் அடிக்கும் வேலையை தொடங்கியுள்ளார். பக்கத்து பில்டிங்கில் பெண்கள் குளிக்கும் நேரத்தை கணக்கிட்டுக் கொண்டு இந்த செயலில் அவர் இறங்கியுள்ளார்.
கைதான பெயிண்டருக்கு எதிராக இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 354 (c)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களின் மாண்புக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும், இச்சட்டத்தின்படி, குற்றவாளிக்கு அதிகபட்சம் 2 வருட சிறை தண்டனை கிடைக்கும்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications