முன்னாள் நீதிபதி கர்ணனை பரோலில் விட வேண்டும்.... மேற்கு வங்க ஆளுனரிடம் மனு!
முன்னாள் நீதிபிதி கர்ணனை பரோலில் விட வலியுறுத்தி அவரது தரப்பு வழக்கறிஞர் மேற்குவங்க ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.
கொல்கத்தா : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி கர்ணனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை பரோலில் விட வேண்டும் என்று மேற்கு வங்க ஆளுனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவரது பதவிக்காலம் ஜூன் 12ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் கடந்த மே மாதம் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அளித்த உத்தரவின் பேரில் அவரை கைது செய்ய கொல்கத்தா போலீசார் சென்னை விரைந்தனர். ஆனால் நீதிபதி கர்ணன் தலைமறைவாகிவிட்டார். அதோடு தன் மீதான தண்டனையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று 4 முறை உச்சநீதிமன்றத்தில் முறையீடும் செய்தார்.
ஆனால் நீதிபதி கர்ணன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மேல்முறையீடுகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனிடையே கடந்த 19ம் தேதி கோவை அடுத்துள்ள மதுக்கரை எனுமிடத்தில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கியிருந்த நீதிபதி கர்ணனை 2 எஸ்.பி-க்கள் தலைமையிலான கொல்கத்தா தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து செவ்வாய்க்கிழமை விமானம் மூலம் கொல்கத்தா கொண்டு செல்லப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன், சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நீதிபதி கர்ணனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை பரோலில் விட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
முன்னாள் நீதிபதி கர்ணன் தரப்பு வழக்கறிஞர் மேற்குவங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதியிடம் மனுவை அளித்தார். நீதியை நிலை நாட்டவும், நியாயமாகவும் விசாரித்து கர்ணனை பரோலில் வெளியில் விட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications