முன்னாள் நீதிபதி கர்ணனை பரோலில் விட வேண்டும்.... மேற்கு வங்க ஆளுனரிடம் மனு!
முன்னாள் நீதிபிதி கர்ணனை பரோலில் விட வலியுறுத்தி அவரது தரப்பு வழக்கறிஞர் மேற்குவங்க ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.
கொல்கத்தா : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி கர்ணனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை பரோலில் விட வேண்டும் என்று மேற்கு வங்க ஆளுனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவரது பதவிக்காலம் ஜூன் 12ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் கடந்த மே மாதம் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அளித்த உத்தரவின் பேரில் அவரை கைது செய்ய கொல்கத்தா போலீசார் சென்னை விரைந்தனர். ஆனால் நீதிபதி கர்ணன் தலைமறைவாகிவிட்டார். அதோடு தன் மீதான தண்டனையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று 4 முறை உச்சநீதிமன்றத்தில் முறையீடும் செய்தார்.
ஆனால் நீதிபதி கர்ணன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மேல்முறையீடுகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனிடையே கடந்த 19ம் தேதி கோவை அடுத்துள்ள மதுக்கரை எனுமிடத்தில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கியிருந்த நீதிபதி கர்ணனை 2 எஸ்.பி-க்கள் தலைமையிலான கொல்கத்தா தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து செவ்வாய்க்கிழமை விமானம் மூலம் கொல்கத்தா கொண்டு செல்லப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன், சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நீதிபதி கர்ணனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை பரோலில் விட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
முன்னாள் நீதிபதி கர்ணன் தரப்பு வழக்கறிஞர் மேற்குவங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதியிடம் மனுவை அளித்தார். நீதியை நிலை நாட்டவும், நியாயமாகவும் விசாரித்து கர்ணனை பரோலில் வெளியில் விட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications