ஆந்திராவில் கரையைக் கடந்தது பேய்ட்டி புயல்.. சூறாவளியுடன், பேய் மழை
Recommended Video

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் பேய்ட்டி புயல் கரையை கடந்தது. அங்கு பேய் மழை பெய்து வருகிறது. மணிக்கு 80 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்தன.
காக்கிநாடாவிற்கு தெற்கே 130 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்த பேய்ட்டி புயல், பிற்பகலில் காக்கிநாடா - ஏனாம் இடையே கரையை கடந்தது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

புயல் தாக்குதலகால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. வாகனங்கள் தூக்கி வீசப்பட்டுள்ளன. பல வீடுகளின் மேற்கூரைகள் சூறை காற்றில் பறந்தன. சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் பகுதிகளில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
தற்போது புயல் தாக்கிய மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழை அடுத்த 24 மணி நேரத்திற்குத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Andhra Pradesh: Trees were uprooted in Visakhapatnam district's Narsipatnam after strong winds and rainfall hit the region. Roads are being cleared by the local administration. #CyclonePhethai pic.twitter.com/PRssp7R1Rr
— ANI (@ANI) December 17, 2018
விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் 14 விமானங்கள் ரத்து செய்யபட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக டெல்லியில் இருந்து வந்த விமானங்கள் ஹைதராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
தமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், பேய்ட்டி புயல் ஆந்திராவை தாக்கியுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications