வடகிழக்கு மாநிலங்களில் ரயில்பாதை அமைக்க ரூ.28 ஆயிரம் கோடி- மோடி அறிவிப்பு
கோஹிமா: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் புதிய ரயில்வே பாதை அமைக்க மத்திய அரசு ரூ.28 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
நாகாலாந்தின் புகழ்பெற்ற ஹார்ன்பில் பாரம்பரிய விழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். நாகாலாந்து மக்களின் பாரம்பரிய ஆடை, தொப்பியை அவர் அணிந்திருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, இந்தியாவிற்குள்தான் நாகாலாந்து இருந்தும் கடந்த 10 ஆண்டுகளில் எந்த பிரதமரும் இங்கு வரவில்லை. வாஜ்பாய்க்கு பிறகு தற்போது நான் வந்திருக்கிறேன். இனி இதுபோல அவ்வப்போது வருவேன்.

நாகாலாந்து இயற்கை செழுமை மிகுந்த மாநிலமாகும். இங்கு சுற்றுலாத் துறையில் ஏராளமான முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வருவார்கள். இங்கு இயற்கை பொருளாதார மண்டலங்களை உருவாக்க வேண்டும் என்பது எனது விருப்பம். சிறப்பு பொருளாதார மண்டலம் பிற மாநிலங்களுக்கு என்றால், நாகாலாந்துக்கு இயற்கை பொருளாதார மண்டலங்கள் சிறந்தது.
வடகிழக்கு மாநிலங்களில் புதிதாக 14 ரயில் பாதைகளை அமைக்க ரூ.28 ஆயிரம் கோடி பேக்கேஜ் அளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 2000 மாணவர்கள், 500 ஆசிரியர்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதன் மூலம் வடகிழக்கு மாநில மக்களுக்கு பிற பகுதிகளைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும். நாகாலாந்து மக்கள் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர்கள்.
வடகிழக்கு மாநிலங்களில் 2 ஜி செல்போன் சேவையை உருவாக்கி சிறந்த தொலைத் தொடர்பை அளிக்கும் வகையில் மத்திய அரசு ரூ.5 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. இவ்வாறு மோடி தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications