எங்கெங்கும் கறுப்பு.. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார் மோடி!
சென்னையில் நடைபெறும் 10வது ராணவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்.
Recommended Video

சென்னை : பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும் ராணுவ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வந்த பிரதமர் விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவிடந்தை சென்றார்.
இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை அதிகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்கும் விதமாக சென்னையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் 10வது பிரம்மாண்ட கண்காட்சி நடைபெற்று வருகிறது. 47 நாடுகளைச் சேர்ந்த ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. தொழில்துறை உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலான கருத்தரங்கங்களும் இந்த கண்காட்சி அரங்கில நடைபெற்று வருகின்றன.

ராணுவ கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வந்துள்ளார்.
இன்று காலையில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர். விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் விமான நிலையத்தின் உள்ளே இருந்தபடியே ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் புறப்பட்டார்.
மாமல்லபுரத்தில் இருந்து சாலை மார்க்கமாக பிரதமர் திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ கண்காட்சி நடைபெறும் இடத்தை சென்றடைந்தார். அங்கு 10வது ராணுவ கண்காட்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications