Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதியில் அமலுக்கு வந்த புது சட்டம்.. இனி ஒரு மாசத்துக்கு எதுவுமே பண்ண முடியாது

Subscribe to Oneindia Tamil

அமராவதி: திருப்பதியில் பக்தர்களுக்குப் வழங்கப்படும் லட்டுப் பிரசாதத்தில் மாடு, பன்றி, மீன் உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் காவல் சட்டப் பிரிவு - 30 அமல்படுத்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளது ஆந்திர அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர். திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்திவிட்டனர் என்று குற்றச்சாட்டு வைத்தார்.

tirupati laddu andhra pradesh jagan mohan reddy

இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை தேவஸ்தானம் சார்பில் கோயிலில் தீட்டு கழிப்பதற்காக பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. திருமலையில் மட்டுமல்லாமல் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. இனிமேல் திருப்பதி லட்டு பிரசாதத்தில் கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் நந்தினி நெய்யை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், திருப்பதி பிரசாதமான லட்டு மற்றும் நெய்யின் தரத்தில் இனி எந்தவிதமான சமரசமும் இருக்காது என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஆந்திரா அரசு சார்பில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிகாரத்தை துவங்கினார். இந்த பரிகாரம் அக்டோபர் 2 ஆம் தேதி ஏழுமலையான் கோயிலில் நிறைவடையவுள்ளது.

அக்டோபர் 1 ஆம் தேதி துணை முதல்வர் பவன் கல்யாண் அலிபிரி வழியாக பாத யாத்திரையாக வந்து சுவாமியை தரிசனம் செய்து தீட்சையை நிறைவு செய்யவுள்ளார். இதற்கிடையே, திருப்பதி கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் புனித்தைக் கெடுக்கும் வகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தைப் போக்க சிறப்பு பூஜை நடத்தப்படவுள்ளது என்று கூறி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பூஜையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை அவர் திருமலைக்கு அலிபிரி வழியாக பாத யாத்திரையாகச் சென்று சுவாமி வழிபாடு செய்யவுள்ளார். இந்நிலையில், ஜெகன்மோகன் வேற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஏழுமலையான் சுவாமி மீது நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் தேவஸ்தான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பின்னரே திருமலைக்குள் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

திருப்பதி லட்டு விவகாரம் பெரும சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும்பாலானோர் திருமலையில் தொடர்ந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதையடுத்து, பாதுகாப்பு கருதி மாவட்டம் முழுவதும் காவல் சட்டப் பிரிவு 30 அக்டோபர் 24 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர சுப்பாராயுடு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினரிடம் முறையான அனுமதி பெறாமல் தடையை மீறி பேரணி மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை பேரணி, பொதுக் கூட்டங்கள் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+