வேட்புமனுவில் மோடி திருமணத்தை மறைத்தது குற்றமே- அகமதாபாத் கோர்ட்!
அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் போது தாக்கல் செய்த வேட்புமனுவில் தமக்கு திருமணம் ஆனதை நரேந்திர மோடி மறைத்தது குற்றம்தான்.. அதே நேரத்தில் காலதாமதமாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவர் மீது தற்போது வழக்கு பதிவு செய்ய முடியாது என்று அகமதாபாத் நீதிமன்றம் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் மனைவி பெயர் என்ன என்ற இடத்தில் எதையும் குறிப்பிடாமல் இருந்தார்.

அதே நேரத்தில் அண்மையில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் முதல்முறையாக தனது மனைவி பெயர் ஜஷோடாபென் என்று வேட்புமனுவில் மோடி குறிப்பிட்டார்.
இதனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மோடி குற்றம் செய்துள்ளதாக கூறி குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான நிஷாந்த் வர்மா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அம்மாநில போலீசில் புகார் செய்தார். ஆனால் அவரது புகாரை போலீசார் ஏற்கவில்லை.
இதைத் தொடர்ந்து அகமதாபாத் நீதிமன்றத்தில் மோடி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வர்மா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.ஷேக் நேற்று தீர்ப்பு அளித்த தீர்ப்பு விவரம்:
நரேந்திர மோடி திருமண விவரத்தை மறைத்ததன் மூலம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ (3)ன்படி குற்றம் செய்திருக்கிறார். ஆனால், இத்தகைய குற்றங்கள் பற்றி ஒரு ஆண்டுக்குள் புகார் செய்ய வேண்டும் என்கிறது குற்றவியல் நடைமுறை சட்டம்.
தற்போது ஒரு ஆண்டு 4 மாதங்கள் கழித்து தான் கூறப்பட்டுள்ளது. இதனால் காலத்தை கடந்த குற்றங்கள் தொடர்பான இப் புகாரை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.கூறினார்.
தற்போது அகமதாபாத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய நிஷாந்த் வர்மா முடிவு செய்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications