பஞ்சாப் எல்லையை ஏன் சீல் செய்யவில்லை?: மத்திய அரசு மீது பாயும் 'கூட்டணி கட்சி' முதல்வர் பாதல்
குர்தாஸ்பூர்: தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல் கிடைத்திருந்தால் மத்திய அரசு உடனே எல்லையை சீல் செய்திருக்க வேண்டும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் பர்காஷ் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தினாநகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எஸ்.பி. உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். தீவிரவாதிகள் தினாநகர் காவல் நிலையம் அருகே உள்ள கட்டிடத்தில் பதுங்கியுள்ளனர். தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பஞ்சாப் முதல்வர் பர்காஷ் சிங் பாதல் கூறுகையில்,
தீவிரவாதம் என்பது மாநில பிரச்சனை அல்ல. அது தேசிய பிரச்சனை. தீவிரவாதிகள் பஞ்சாபில் இருந்து வரவில்லை. மாறாக எல்லையைத் தாண்டி வந்துள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல் கிடைத்திருந்தால் எல்லையை சீல் செய்வது உள்துறை அமைச்சகத்தின் வேலை ஆகும்.
ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் துணிச்சலாக போராடி வருகிறார்கள். எனக்கு உடல்நலம் சரியில்லை. இருப்பினும் ஒவ்வொரு 10 முதல் 15 நிமிடத்திற்கு ஒருமுறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலைமையை தெரிந்து கொண்டு வருகிறேன் என்றார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications