பஞ்சாப் எல்லையை ஏன் சீல் செய்யவில்லை?: மத்திய அரசு மீது பாயும் 'கூட்டணி கட்சி' முதல்வர் பாதல்
குர்தாஸ்பூர்: தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல் கிடைத்திருந்தால் மத்திய அரசு உடனே எல்லையை சீல் செய்திருக்க வேண்டும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் பர்காஷ் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தினாநகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எஸ்.பி. உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். தீவிரவாதிகள் தினாநகர் காவல் நிலையம் அருகே உள்ள கட்டிடத்தில் பதுங்கியுள்ளனர். தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பஞ்சாப் முதல்வர் பர்காஷ் சிங் பாதல் கூறுகையில்,
தீவிரவாதம் என்பது மாநில பிரச்சனை அல்ல. அது தேசிய பிரச்சனை. தீவிரவாதிகள் பஞ்சாபில் இருந்து வரவில்லை. மாறாக எல்லையைத் தாண்டி வந்துள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல் கிடைத்திருந்தால் எல்லையை சீல் செய்வது உள்துறை அமைச்சகத்தின் வேலை ஆகும்.
ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் துணிச்சலாக போராடி வருகிறார்கள். எனக்கு உடல்நலம் சரியில்லை. இருப்பினும் ஒவ்வொரு 10 முதல் 15 நிமிடத்திற்கு ஒருமுறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலைமையை தெரிந்து கொண்டு வருகிறேன் என்றார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications