மோடியைப் பார்த்து அஞ்சவில்லை; காங்கிரஸ் தோற்றால் முழுப்பொறுப்பேற்பேன்- ராகுல் காந்தி
டெல்லி: தேர்தல் களத்தில் நரேந்திர மோடியைக் கண்டு அஞ்சவில்லை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றால், அதற்கான முழுப் பொறுப்பை ஏற்க தயார் என்று கூறியுள்ளார்.
டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், கூறியுள்ளதாவது:
1984ம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் காங்கிரஸ் கட்சியினர் சிலருக்கு தொடர்பு இருந்திருக்கலாம். அதற்காக மன்னிப்புக் கோரப் போவதில்லை.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்கும், குஜராத் கலவரத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம் உள்ளது. அந்த கலவரத்தில் காங்கிரசுக்கு தொடர்பு இல்லை. ஆனால், குஜராத் கலவரத்தில் அம்மாநில பாரதிய ஜனதா அரசுக்கு தொடர்பு இருக்கிறது. சீக்கியர்கள் மீதான வன்முறையை கட்டுப்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்தது. ஆனால், குஜராத் கலவரத்தை தூண்டியதே அம்மாநில அரசு தான் என்று விமர்சித்தார்.
தேர்தல் களத்தில் நரேந்திர மோடியைக் கண்டு அஞ்சவில்லை என்றும், பாரதிய ஜனதாவை காங்கிரஸ் வீழ்த்தும் எனவும் ராகுல் உறுதிபட கூறினார்.
தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் அதற்கான முழுப் பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்ட ராகுல், பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
அரசியல் கட்சிகளை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வருவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, இது தொடர்பாக நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications