ராஜிவைப் போல ராகுலுக்கும் தொலைநோக்கு சிந்தனை இருக்கிறது.. சொல்வது பிரியங்கா
அமேதி: ராஜிவ்காந்தியை போல ராகுல்காந்திக்கும் நாடு குறித்த தொலைநோக்கு சிந்தனை இருக்கிறது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியை ஆதரித்து அவரது சகோதரி பிரியங்கா காந்தி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

அமேதி தொகுதியில் தற்போது எம்பியாக உள்ள எனது சகோதரர் ராகுல்காந்தி இத்தொகுதி மக்களின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக அதிக பணியாற்றியுள்ளார். எனது தந்தை ராஜிவ்காந்தி அரசியலுக்கு வந்த புதிதில் எதிர்க்கட்சிகளிடமிருந்து எந்த மாதிரியான விமர்சனங்களை சந்தித்தாரோ அதுபோலவே ராகுல்காந்தி தற்போது விமர்சனங்களை சந்தித்து வருகிறார். எனது தந்தையை போலவே இந்த நாடு குறித்த தொலைநோக்கு பார்வை ராகுல்காந்திக்கும் உள்ளது.
வெளியில் இருந்து வந்து அமேதி தொகுதியில் போட்டியிடுபவர்களுக்கு உங்களது வாக்குகளை அளிக்காதீர்கள். எங்கள் குடும்பத்தை பொறுத்தளவில் அமேதி ஒரு புனித தலம். எனவேதான் இந்த தொகுதிக்கு மட்டுமின்றி அருகாமையிலுள்ள தொகுதிகளுக்கும் ராகுல்காந்தி முடிந்த பணிகளையாற்றியுள்ளார்.
ராகுல்காந்தி இத்தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறலாம். ஆனால் இத்தொகுதிக்கு ராகுல் செய்த பணிகளை ஒரு பட்டியலைப்போல என்னால் வாசிக்க முடியும். ராகுல்காந்தியின் பணிகளால் இத்தொகுதியிலுள்ள 12 லட்சம் பெண்கள் நேரடியாக பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications