2 மாதங்களுக்கு ஒரு முறை ரயில் கட்டணத்தை உயர்த்த பரிந்துரை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு மிட்டல் குழு பரிந்துரைத்துள்ளது.
ரயில்வே துறை க்கு வருமானங்கள் அதிகரிப்பது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் சார்பி்ல் டி.கே. மிட்டல் குழு கடந்த மாதம் 4-ந் தேதி அமைக்கப்பட்டது.

இக்குழு தமது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையின் பரிந்துரைகள்:
- புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணங்களை உயர்த்திக்கொள்ளலாம்.
- இக் கட்டண உயர்வும் ஒவ்வொரு 2 மாதத்திற்கு ஒரு முறை கி.மீ ஒன்றுக்கு 2 பைசா வீதம் உயர்த்திக் கொள்ளலாம்.
- ரயில்வே நிர்வாகம் குறைந்தபட்ச தூரமான 10கி,.மீ என்பதை 20கி.மீ ஆகவும் எக்ஸ்பிரஸ் ரயி்ல்களின் குறைந்தபட்ச தூரத்தை 50கி.மீலிருந்து 100 கி.மீ., ஆகவும் அதிகரிக்க வேண்டும்.
- சாலைப் போக்குவரத்தை ஒப்பிடுகையில் புறநகர் ரயில் கட்டணங்கள் 60% குறைவாக உள்ளது. சாலைபோக்குவரத்து இணையாக கட்டணங்களை அதிகரிப்பதன் மூலம் ரயில்வே துறை வருமானங்களை பெற முடியும்.
இவ்வாறு மிட்டல் குழு பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications