இறங்க வேண்டிய இடம் வரும்போது பயணிகளை எஸ்.எம்.எஸ். அனுப்பி ரயில்வே எழுப்பும்!
டெல்லி: ரயிலில் பயணிக்கும் பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய இடம் வரும்போது அவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அலர்ட் மெசேஜ் அனுப்பும் வசதியை ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா அறிவித்துள்ளார்.
இன்று கெளடா தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய இடத்தை நெருங்கும்போது அவர்களுக்கு அலர்ட் செய்தி எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் தூக்கத்தில் பயணிகள் இருந்தால் கூட தாங்கள் இறங்க வேண்டிய இடத்திற்கு முன்பே எழும்பி தயாராகும் வாய்ப்பு உருவாகும்.

இதுபோக ரயில் பயணிகளுக்காக ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ள சில சலுகைகள்:
ரயில்கள் எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கின்றன என்பதை ஆன்லைனில் நேரடியாக அறிய வசதி செய்யப்படும்.
தேர்ந்தெடுக்கப்ப்ட குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் வைஃபை இணைய வசதி ஏற்படுத்தப்படும்.
ரயிலில் பயணத்தின்போது கேன்டீனுக்குப் போய் உணவு வாங்க வேண்டிய அவசியம் இனி இல்லை. மாறாக, உணவை எஸ்எம்எஸ் மூலமே ஆர்டர் செய்யலாம். ரயிலில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து புகார் செய்ய ஐவிஆர்எஸ் போன் லைன்கள் உருவாக்கப்படும்.
ரயில்களில் பயணிகளுக்கு ஆர். ஓ மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கப்படும். ஏசி, முதல் வகுப்பு படுக்கைகள், தலையணை உறைகளை துவைக்க இயந்திர லாண்டரிகள் பயன்படுத்தப்படும்.-முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், ப்ளாட்பார்ம் டிக்கெட்டுகள், பார்க்கிங் டிக்கெட்டுகளையும் இனிமேல் ஆன்லைனில் பெறலாம்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications