காலைக் கடன் கழித்த பெண்களை படம் பிடித்த அரசு அதிகாரிகள்.. தட்டிக்கேட்ட முதியவர் கொலை
திறந்தவெளிகளில் காலைக் கடனுக்கு சென்ற பெண்களை படம் பிடித்த அரசு அதிகாரிகளை தட்டிக் கேட்ட முதியவர் அடித்தே கொல்லப்பட்டார்.
ஜெய்ப்பூர்: புல்வெளிகளில் மலம் கழிக்க சென்ற பெண்களை படம் பிடித்த அரசு அதிகாரிகளை தட்டிக் கேட்ட முதியவரை அவர்கள் அடித்து கொன்றனர்.
ராஜஸ்தான் மாநிலம், பிரதாப்கார் நகராட்சி பகுதி தூய்மையான பகுதியாக அறிவிக்கப்பட்டது. இங்கு திறந்த வெளியில் காலைக் கடன் கழிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கழிவறைகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு சிலர் திறந்தவெளியில் மலம் கழிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

படம் பிடித்த அதிகாரிகள்
இதை கண்காணிக்கும் பணியை நகராட்சி செய்து வருகிறது. அந்த அதிகாரிகள் காலை, மாலை நேரங்களில் ரோந்து வந்து திறந்த வெளிகளில் மலம் கழிப்பதை படம் பிடிப்பர்.
திறந்தவெளியை பயன்படுத்தக் கூடாது
இதற்காவது மக்கள் அஞ்சி திறந்த வெளியை பயன்படுத்த மாட்டார்கள் என்பது நம்பிக்கை. அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை பிரதாப்கார் நகராட்சி பகுதியில் உள்ள பாக்வாஸா காசி பகுதியில் சில பெண்கள் திறந்த வெளியில் மலம் கழித்தனர்.
முதியவர் தட்டிக் கேட்டார்
அப்போது அங்கு வந்த நகராட்சி ஆணையர் அசோக் ஜெயின் தலைமையிலான 4 அதிகாரிகள் அங்கு வந்து அந்த பெண்களை படம் எடுத்தனர். இதை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த முதியவர் ஷபார்கான் (55) என்பவர் அதிகாரிகள் படம் பிடித்ததை தடுத்து நிறுத்தினர்.
முதியவர் மீது தாக்குதல்
இதனால் ஆத்திரம் அடைந்த ஷபார்கானை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி பலியானார்.
மருத்துவ அறிக்கையில் வேறு
ஆனால் மருத்துவ அறிக்கையில் மாரடைப்பு காரணமாக இறந்தததாக குறிப்பிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த முதியவரின் சகோதரர் நூர்முகமது போலீஸில் புகார் அளித்துள்ளார்.
கொலை வழக்கு
இதையடுத்து நகராட்சி ஆணையர் அசோக் ஜெயின் உள்பட 4 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யப்படவில்லை.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications