மக்களை ஏமாற்றிய மோடிக்கு தண்டனையாக பா.ஜ.க.வை தோற்கடியுங்கள்... பீகாரில் ராம்ஜெத்மலானி பிரசாரம்
பாட்னா: மக்களின் நம்பிக்கையை மோசடி செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தண்டனையாக பீகார் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ராம்ஜெத்மலானி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெத்மலானி பேசியதாவது:
லோக்சபா தேர்தலில் நாட்டின் பிரதமராக மோடியை முன்னிறுத்தி பிரசாரம் செய்ததற்கான பரிகாரம் தேடி தற்போது வந்துள்ளேன்.

நரேந்திர மோடியை ஒரு தேவதூராகத்தான் நான் நினைத்தேன்.. ஆதரித்தேன்.. ஆனால் ஏமாந்து போய்விட்டேன்.
அவர் மக்களின் நம்பிக்கையை மோசடி செய்துவிட்டார். அவருக்கான தண்டனையை பீகார் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதன் மூலம் வழங்க வேண்டும்.
பா.ஜ.க.வின் தோல்வி என்பது பீகாரில் இருந்து தொடங்க வேண்டும் என விரும்புகிறேன். ஆகையால் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்க முந்தைய காங்கிரஸ் அரசும் தற்போதைய பாரதிய ஜனதா அரசும் உருப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.
நமது நாட்டுக்கு கருப்புப் பணம் கொண்டுவரப்பட வேண்டும் என விரும்பினால் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், தற்போதைய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி இருவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும்.
ஜெர்மனியில் கருப்புப் பணத்தைப் பதுக்கிவைத்துள்ள 1,400 நபர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு எழுத்துபூர்வமாகக் கோரிக்கை விடுத்திருக்க வேண்டும். அப்படி கோரிக்கை விடுக்கப்பட்டால் ஜெர்மனி அரசு அந்தப் பெயர்களை வெளியிடவும் தயாராக இருந்தது.
இதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் பல தலைவர்களுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் ஒருவர் கூட பதிலளிக்கவில்லை. என்னை முட்டாளாக்கியது போல், பீகார் மக்களையும் பாரதிய ஜனதா கட்சி முட்டாளாக்க முடியாது.
இவ்வாறு ராம்ஜெத்மலானி கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியில் இருந்த ராம்ஜெத்மலானி, அக்கட்சித் தலைவர்களுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி வந்தார். இதனால் 2013ஆம் ஆண்டு அவர் கட்சியில் இருந்து 6 ஆண்டுகாலத்துக்கு நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications