காங். கட்சியின் தலைவரும் நாட்டின் பிரதமரும் ஒரே நபராக இருக்க வேண்டும்: ப. சிதம்பரம்
டெல்லி: நாட்டின் பிரதமரும் கட்சி தலைவரும் ஒரே நபராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு ப. சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
சாதாரணமாக கட்சியின் தலைவரும் பிரதமரும் ஒரே நபராகத்தான் இருக்கின்றனர். இது நம் தற்போது வாழும் முறை சார்ந்தது. கட்சியின் தலைவரும் பிரதமரும் ஒரே நபராக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

சஞ்சஜ் பாரு புகார் அபத்தம்
பிரதமர் மன்மோகன் சிங் செயல்படாத பிரதமராக இருந்தார் என்று பிரதமரின் முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்ஜய் பாருவின் குற்றச்சாட்டு அபத்தமானது.

ஹிட்லர், முசோலினி தேவை இல்லை
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் தம்மை வலிமையான நபராக முன்னிறுத்துகிறார். நாட்டுக்கு இப்போது தேவை ஹிட்லர், முசோலின் போன்ற வலிமையான நபர்கள் அல்ல. அனைத்து தரப்பு மக்களும் ஏற்கக் கூடிய ஒருவர்தான் தேவை.

ஏன் வதேரா மீது விசாரணை?
ராபர் வதேரா- டி.எல்.எப் நிறுவனத்துக்கு இடையேயான வர்த்தக உறவு தனிநபர் சார்ந்தது. அது தொடர்பாக எந்த ஒரு புகாரும் இல்லை.. விசாரணையும் இல்லை. அப்படியான நிலையில் அரசு ஏன் விசாரணை நடத்த வேண்டும்.

ஆவரேஜ் மாநில முதல்வர் மோடி
மோடியைப் பொறுத்தவரை அவர் ஒரு சராசரி வளர்ச்சி கொண்ட ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. தற்போதைய லோக்சபா தேர்தல் முடிவுகள் ஆச்சரியமளிக்கக் கூடியதாக இருக்கும்.

ராகுலை பிரதமர் வேட்பாளராக்கனும்
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்க வேண்டும். பிரியங்காவைப் பொறுத்தவரையில் அரசியலில் இன்னும் அதிகம் ஈடுபட வேண்டும். ஆனால் அது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சி அவருக்கு அழுத்தம் கொடுக்காது.
குஜராத்தில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் இதுவரை நீதிபதி நியமிக்கப்படவில்லைதான்..
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
-
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
காங்கிரஸின் ஒரே நம்பிக்கையிலும் ஆப்பு.. கேரளா சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! என்ன இப்படி ஆகிடுச்சு -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications