அன்னியசெலாவணி வழக்குகளில் தினகரன் தப்பவே முடியாது- சுப்ரீம்கோர்ட்டில் 2 மனுக்களும் தள்ளுபடி!
அன்னிய செலாவணி மோசடி வழக்குகளில் தினகரனின் 2 மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்துவிட்டது.
டெல்லி: அன்னிய செலாவணி மோசடி வழக்குகளில் தினகரனின் 2 மனுக்களை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் அன்னிய செலாவணி வழக்குகளில் தினகரன் தப்பவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் மீது 20 ஆண்டுகளுக்கு முன்னர் அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஹைகோர்ட் உத்தரவு
ஆனால் அமலாக்கப் பிரிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து தினகரன் மீதான இரு அன்னிய செலாவணி மோசடி வழக்குகளையும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இழுத்தடிப்பு
இதனால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையும் இழுத்தடிப்பதற்காக தம் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்குகளுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

தள்ளுபடி
அவரது மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அன்னிய செலாவணி மோசடி வழக்குகளுக்குத் தடை விதிக்க அதிரடியாக மறுத்துவிட்டது. இதனால் எழும்பூர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார் தினகரன்.

ரூ28 கோடி அபராதம் உறுதி
இதேபோல் மற்றொரு அன்னிய செலாவணி மோசடி வழக்கில் ரூ28 கோடி அபராதத்தை தினகரன் கட்டுவதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. இந்த அபராதத்தை ரத்து செய்ய கோரியும் தினகரன் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் அன்னிய செலாவணி மோசடி வழக்குகளில் இருந்து தினகரனால் தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications