சர்ச்சையை ஏற்படுத்திய நீதிபதி லோயா வழக்கு விசாரணை... தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!
நீதிபதி லோயா மரண வழக்கு சரி வர விசாரிக்கப்படவில்லை என்று 4 நீதிபதிகள் சர்ச்சை ஏற்படுத்தி இருந்த நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு திங்கட்கிழமை விசாரிக்கிறது.
டெல்லி : உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நீதிபதி லோயா மரண வழக்கை விசாரணைக்கு எடுக்கிறது. நீதித்துறையில் சர்ச்சையை ஏற்படுத்திய 4 நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நிலையில் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி ஏஎம் கன்வில்கர் மற்றும் டிஒய் சந்திரசத் தலைமையிலான உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு நேற்று ஒரு முடிவை எடுத்துள்ளது. இதன்படி நீதிபதிகள் சர்ச்சை கிளப்பிய நீதிபதி லோயா மரண வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கும் என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இனி நீதிபதி லோயா மரண வழக்கானது தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையிலேயே விசாரணை நடக்கும் என்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. நீதிபதி லோயா மரண விசாரணை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான இரண்டு நபர் அமர்வின் விசாரணைக்கு ஒதுக்கப்பட்டது. உச்சநீதிமன்ற 10வது நீதிமன்றத்தின் சீனியர் நீதிபதிகள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர், குரியன் ஜோசப் உள்ளிட்ட 4 நீதிபதிகள் வழக்குகள் ஒதுக்கப்படுவதில் பாரபட்சம் இருப்பதாக தெரிவித்தனர். நீதிபதி லோயா மரண வழக்கு ஒதுக்கீடு உள்பட பல வழக்குகளை நீதிபதிகள் இதற்கு உதாரணமாக சொல்லியிருந்தனர்.
நீதிபதி அருண் மிஸ்ரா, கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது தான் லோயா வழக்கை நேர்மையாக விசாரித்ததாகவும், தன் மீதான குற்றச்சாட்டு வேதனை அளிப்பதாகவும் மனம் திறந்து சொல்லி இருந்தார். இதற்கு நீதிபதி அருண் மிஸ்ராவை குற்றம்சாட்டுவது தங்களின் நோக்கமல்ல பிரச்னையை தான் எடுத்துச் சொல்வதாக நீதிபதி செல்லமேஸ்வர் அவருக்கு ஆறுதல் கூறி இருந்தார்.
நீதிபதி லோயா கடந்த 2041ம் ஆண்டு நாக்பூரில் 48 வயதில் மர்மமான முறையில் மரணமடைந்தார். 2005ம் ஆண்டு பாஜக தலைவர் அமித்ஷா உத்தரவிட்ட போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்தவர் நீதிபதி லோயா. நீதிபதி லோயா மரணமடைந்த ஒரு வாரத்தில் வேறு நீதிபதி அந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அமித்ஷாவை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு நீதிபதி லோயாவின் உறவினர்கள் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். லோயாவின் சகோதரர் அனுராதா பியானியும் அமித்ஷாவிற்கு ஆதரவாக பேசுவதற்காக தனக்கு லஞ்சம் தரப்பட்டதாக தெரிவித்தார். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் பிஎஸ் லோன், செயற்பாட்டாளர் தெஹ்சீன் பூனவாலா உள்ளிட்டோர் சுதந்திரமான விசாரணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications