பலூனில் விந்தணுக்களை நிரப்பி அதை மாணவி மீது தூக்கி எறிந்த மர்மநபர்... டெல்லியில் ஷாக் சம்பவம்
கல்லூரி மாணவி மீது விந்தணுக்கள் நிரப்பப்பட்ட பலூனை மர்மநபர் தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
டெல்லி: டெல்லியில் ஆட்டோ ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது விந்தணுக்கள் நிரப்பப்பட்ட பலூனை மர்மநபர் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி பல்கலைக்கழக கல்லூரி மாணவி ஒருவர், கடந்த 24ம் தேதி தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அம்மாணவி அப்பதிவில் கூறியிருப்பதாவது, 'சம்பவத்தன்று நான் எனது தோழியுடன் மதிய உணவை அமர் காலனி மார்க்கெட்டில் உள்ள உணவகத்தில் முடித்துவிட்டு, மீண்டும் கல்லூரி ஹாஸ்டலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். மாலை 5 மணியளவில் ரிக்ஷாவில் அமர்ந்திருந்த என் மீது பலூன் ஒன்று வந்து விழுந்தது. உள்ளே திரவம் போன்று ஏதோ நிரப்பப்பட்டிருந்த அந்த பலூன், என் இடுப்புப் பகுதியில் பட்டு உடைந்து கீழே விழுந்தது. இதனால் எனது கருப்பு நிற பேண்ட் ஈரமானது. பின்னர் அது காய்ந்தபோது வெள்ளை நிறமாக காட்சியளித்தது.
நான் முதலில் அது விந்தணுக்களாக இருக்கும் எனக் கருதவில்லை. ஆனால், ஹாஸ்டலுக்குத் திரும்பியதும் எனது தோழிகள் தான் அதனைக் கவனித்து அது விந்தணுக்கள் எனக் கூறினர். இதனால் நான் அதிர்ச்சியடைந்தேன். யார் என் மீது விந்தணுக்கள் நிரப்பப்பட்ட பலூனைத் தூக்கி எறிந்தது எனத் தெரியவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பதிவில் அப்பெண், “டெல்லிக்கு வந்த இந்த ஏழு மாதங்களில் இது போன்ற பாலியல் தொல்லைகளை அதிகளவில் சந்தித்து வருகிறேன். தெரியாமல் படுவது போன்று என்னை சீண்டுபவர்களையும் பார்த்துள்ளேன். சமயங்களில் மோசமான பெயர்களால் என்னை அவர்கள் திட்டியும் செல்வார்கள்” என அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
சமூகவலைதளத்தில் வைரலாகப் பரவிய இந்த பதிவு குறித்து போலீசாருக்கும் தெரிய வந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட பெண்ணை தங்களால் தொடர்பு கொள்ள இயலவில்லை எனத் தெரிவித்துள்ள டெல்லி போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக புகார் எதுவும் வரவில்லை என்றும் கூறியுள்ளனர்.
விரைவில் ஹோலிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லிப் பல்கலைக்கழகம் தங்களது கல்லூரி மற்றும் ஹாஸ்டல் வளாகத்தில் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுவது போல் மாணவிகள் மீது சிலர் வண்ணப்பொடி கலந்த நீர் நிரம்பிய பலூன்களைத் தூக்கி வீசுவது, வண்ணப்பொடி பூசுவது போல் அத்துமீறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக புகார் அதிகரித்துள்ளது. எனவே இந்தாண்டு அப்படி அத்துமீறும் மாணவர்கள் ஈவ் டீசிங் செய்ததாக போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவர்’ என எச்சரித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications